Wednesday, July 18, 2012

யோகம் 1: விசாரணை யோகம் !!!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


கீதை 1: 22 அர்ச்சுணண் கூறினான் : அழிவற்றவரே ! யுத்தம் செய்ய விரும்பி இங்கு வந்திருப்போரை நான் அறிந்து கொள்ளும்படியும் ; கடுமையான யுத்த நிகழ்வில் பங்கெடுப்போர்களின் திறத்தை நான் கணிக்கும் படியும் ரதத்தை இரண்டு சேனைகளுக்கும் நடுவாக நிருத்துவீராக !

கீதை 1: 23 தீயவர்களான திருதராட்டர மகன்களை திருப்திபடுத்தும் நோக்கத்துடன் யுத்தம் புரிய வந்திருப்போர்களை நான் பார்க்கட்டும் !

கீதை 1: 24 இவ்வாறு அர்ச்சுணன் கூறக்கேட்டதும் கிரிஸ்ணர் தேரை இரண்டு சேனைகளுக்கும் நடுவாக கொணர்ந்தார் !!

கீதை 1: 25 பீஸ்மர் , துரோணர் மற்றும் உலக அரசுகளின் தலைவர்களெல்லாம் கூடியிருப்பதை காட்டி ``பார்த்தா ! குருவம்சத்தினர் எல்லோரும் கூடியிருப்பதை பார் !!`` என்றார் கிரிஸ்ணர் !!

கீதை 1: 26 அங்கு அர்ச்சுணன் சேனைகளின் இருபக்கத்திலும் தந்தைமார்களும் ; பாட்டண்மார்களும் ;ஆசிரியர்களும் ; மைத்துனர்களும் ; சகோதரர்களும் ; மகன்களும் ; பேரர்களும் ; மாமன்மார்களும் மற்றும் நலவிரும்பிகளும் குழுமியிருப்பதை கண்டான் !!

கீதை 1: 27 குந்தியின் மகன் அனைத்து தரமான உறவிணர்களையும் ; நண்பர்களையும் கண்ட போது கவிரக்கத்தால் நிறைந்து புலம்பத்தொடங்கினான் !!

கீதை 1: 28 எனதருமை கிரிஸ்ணா ! போர்க்குணத்தால் உந்தப்பட்டுள்ள எனது உறவிணர்களையும் நண்பர்களையும் காணும் போது என் நரம்பு முடிச்சுகளும் அதிர்ந்து ; என் வாய் திக்குகிறது !

கீதை 1: 29 என் முழு உடம்பும் ஸ்தம்பித்து ; மயிர்க்கால்கள் கூச்செரிந்து ; என் காண்டீபம் கைநழுவி போகிறது ! ஐயோ !என் மேனியெங்கும் காந்துகிறதே !!

கீதை 1: 30 என் புத்தி பேதலித்து நிலை தடுமாறுகிறேன் ! கெட்டவையே நடக்க போவதை உணர்கிறேன் ! அசுரர்களை அழிக்கிறவரே ! இனிமேலும் இங்கிருக்க என்னால் முடியாது !!

கீதை 1:31 எனதருமை கிரிஸ்ணா ! எனது சொந்தபந்தங்களை கொல்வதால் எவ்வாறு ஏதாகிலும் நன்மை விளையக்கூடுமோ என தெறியவில்லை ? அல்லது அந்த வெற்றியால் விளையும் அரசாட்சியிலும் சுகபோகங்களிலும் எனக்கு விருப்பமில்லை !!

கீதை 1:32 யாருக்காக அரசாட்சியையும் சுகபோகங்களையும் தேடுகிறோமோ அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ அவர்களெல்லாம் இந்த யுத்தகளத்தில் அணிவகுக்கும் தேவை என்ன ?

கீதை 1:33 மதுசூதனா ! அனைத்து ஆசான்கள் ; தந்தையர் ; பிள்ளைகள் ;பாட்டணார்கள் 'மைத்துனர்கள் ;மாமன்மார்கள் ; பேரன்மார்கள் சகோதரர்கள் மற்றும் அனைத்து உறவிணர்களும் தமது உயிரையும் உடமைகளையும் இழக்க சித்தமானவர்களாய் என்முன்னே நிற்கும்போது ; ஒருவேலை அவர்கள் என்னை கொல்வதாகவே இருந்தாலும் ஏன் நான் அவர்களை கொல்லவேண்டும் ?

கீதை 1:34 உயிரிணங்களை காக்கிறவரே ! இந்த பூவுலகிற்கு பகரமாக மூவுலகங்களையும் கொடுப்பதாகவே இருந்தாலும்கூட நான் அவரகளுடன் சண்டையிட தயாராயில்லை !

கீதை 1:35 திருதராட்டரரின் மக்களை கொல்வதால் என்ன மகிழ்சி கிட்டபோகிறது ?

கீதை 1:36 இத்தகைய எதிராளிகளை அழிப்பதால் பாவமே நம்மை மேற்கொள்ளும் ! எனவே திருதராட்டரரின் மக்களையும் சொந்தபந்தங்களையும் கொல்லுவது நன்மைக்கு ஏதுவானதல்ல !

கீதை 1:37 கிரிஸ்ணா ! நம் சொந்தபந்தங்களை கொண்ற பிறகு எவ்வாறு மகிழ்சியாக இருக்கமுடியும் ? அல்லது என்ன ஆதாயம் பெறமுடியும் ?

கீதை 1:38 ஜனார்த்தனா ! பேராசையால் மேற்கொள்ளப்பட்ட இதயத்தால் இந்தமனிதர்கள் நண்பர்களுடன் சண்டையிடுவதையும் ; குடும்பதார்களை அழிப்பதையும் சரியெனவே கருதினாலும் குடும்பத்தை அழிப்பதை குற்றமென கருதும் நம்மைப்போன்றோர் ஏன் இந்த பாவகாரியங்களில் ஈடுபடவேண்டும் ?

கீதை 1:39 வம்சங்கள் அழிவதால் தெய்வீகத்தால் கட்டபடும் குடும்பமாண்புகள் சீரழிகிண்றன ! அதனால் எஞ்சிய மனிதர்களோ நெறிபிறழ்ந்தவர்களாய் மாறுவர் !!

கீதை 1:40 எப்போது குடும்பத்தில் நெறிபிறழ்ச்சி வேரூண்றுகிறதோ அப்போது பெண்கள் சீர்கேட்டை அடைவர் ! பெண்மையின் தரம் தாழும்போது முறண்பாடான சந்ததி உருவாகும் !!

கீதை 1:41 தரமற்ற சந்ததி பெருகும் போது குடும்ப வாழ்வு நரகவாழ்வாய் மாறிப்போகும் ! அதற்கு காரணமானவர்களையும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் ! பின் சந்ததியினரின் புண்ணியகர்மங்கள் எழும்பாததால் முன்னோர்களின் ஆத்துமாக்களும் உய்விப்பார் இன்றி கீழ்நிலையடையும் !!

கீதை 1:42 அனைத்து சமூக மறுமலர்ச்சி மற்றும் குடும்ப நல காரியங்களும் வீணாகப்போகும் !!

கீதை 1:43 கிரிஸ்ணா ! சீடர் பரம்பரியத்திடம் நானும் கேள்விப்பட்டுள்ளேன் !`` யார் குடும்ப மாண்புகளை குலைத்தார்களோ அவர்கள் எப்போதும் நித்திய நரகத்தையே அடைவர் !!`` என்று !!

கீதை 1:44 மகத்தான பாவகாரியங்களை செய்ய நாம் தயராவது என்ன விந்தை ? அரச சுகபோகங்களை சுகிக்க சொந்தபந்தங்களையே கொல்ல தயாராகிறோமே ??

கீதை 1:45 யுத்தகளத்தில் நிராயுதபானியாகவும் எதிர்த்து தடுக்காமலும் நான் இருக்கும் போதே திருதராட்டிர மக்களின் ஆயுதங்களால் கொல்லப்படுவதே எனக்கு மேலாக தெறிகிறது !!

கீதை 1:46 இவ்வாறு பேசிய அர்ச்சுணண் துக்கம் மேவியதால் வில்லையும் அம்புகளையும் எறிந்து விட்டு சோர்ந்து போய் ரதத்தில் அமர்ந்து விட்டான் !!

கீதை 2:1 சஞ்சயன் கூறினான் :புத்தி பேதலித்து பரிதாபத்தால் நிறைந்து கண்ணீரும் கம்பலையுமாய் தவிக்கும் அர்ச்சுணனை பார்த்து இறைதூதர் கிரிஸ்ணர் பின்வருமாறு உபதேசித்தார் :

கீதை 2:2 எனதருமை அர்ச்சுணா ! இந்த மனக்கலக்கம் எவ்வாறு உன் மேல் வந்தது ? வாழ்வின் அர்த்தம் உணர்ந்த மனிதனுக்கு இவை தகுதியல்லவே ! மறுமைக்கும் பரலோகத்திற்கும் பாத்திரனாவதற்கு பதில் அவமானத்தையல்லவோ கொண்டு வந்து சேர்க்கும் ?

கீதை 2:3 ப்ரதாவின் மகனே ! தகுதியை குறைக்கும் பலவீணத்திற்கு இடம் கொடாதே ! எதிரிகளை சுக்குநூறாக்கும் உனக்கு இது ஏற்றதல்ல ! சிறுமையான மனத்தளர்ச்சியை துடைதெறிந்து விட்டு விளித்தெழுவாயாக !!

கீதை 2:4அர்ச்சுணன் கூறினான் : மாயைகளை கலைகிறவரே ! தீமைகளை அழிக்கிறவரே ! மனதால் மதிக்கிற பீஸ்மரையும் துரோணரையும் எவ்வாறு அம்புகளால் தாக்குவேன் ?

கீதை 2:5 விலைமதிப்பில்லாத எனது ஆசாண்களான மகத்துவமிக்கவர்களை கொன்று என்னை நிலைநிறுத்தி கொள்வதை விட பிச்சை எடுத்து உயிர் வழ்வது மேலல்லவா ? உலகை ஆளும் நோக்கத்தை விட அவர்கள் அருமையானவர்களல்லவா ? அவர்கள் கொல்லப்பட்டால் நான் அடையும் இன்பங்கள் யாவும் அவர்கள் ரத்தம் தோய்ந்ததாய் தோன்றாதா ?

கீதை 2:6 அவர்களை வெற்றி கொள்வதும் அல்லது அவர்களால் வெற்றிகொள்ளப்படுவதும் என்ன சிறப்பை கொண்டுவந்து விடும் ? திருதுராஸ்ட்டரின் புதல்வர்களை கொண்று விட்டு நாம் ஏன் வாழவேண்டும் ? யாரை நாம் கொல்ல விரும்பமாட்டோமோ அவர்களெல்லாம் நமக்கு எதிரே யுத்தத்திற்கு நிற்கிறார்களே ?

கீதை 2:7 என்ன செய்வது என உணரமுடியாத அளவு குழப்பமாக உள்ளது ! நிம்மதியை இழந்து பலகீணத்தால் தவிக்கிறேன் ! இந்த நிலையில் எது சிறந்தது என்பதைப்பற்றி எனக்கு உணர்த்தும் படி வேண்டுகிறேன் !ஏனெனில் நான் உமது சீடன் : உம்மை சரணடைந்த ஆத்துமாக்களில் ஒருவன் ! எனக்கு வழிகாட்டுவீராக !!

கீதை 2:8 ஐம்புலன்களையும் வரழசெய்யும் துக்கத்தை விரட்டும் வழியின்றி தவிக்கிறேன் ! சகல  ஸவ்பாக்கியங்கள் நிறைந்த ஈடுஇணையற்ற அரசாட்சியை இப்பூமியில் நான் ஸ்தாபித்து தேவதூதருக்கொத்த மாட்சிமையை அடைந்தாலும் இந்த துக்கத்தை மறக்க இயலாதே !!

கீதை 2:9 இவ்வாறு புலம்பிய அர்ச்சுணன் கூறினான் : ``கிரிஸ்ணா !கோவிந்தா ! என்னால் போர் செய்யவே முடியாது !!``