Tuesday, July 17, 2012

கீதை 15 : புருஷோத்தம யோகம்


வேத மரம் !

கீதை 15 : 1 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் : உன்னதத்தில் வேர்களையும் ; பூமியை நோக்கி வளரும் கிளைகளையும் ; வேதபதங்களை இலைகளாகவும் கொண்டதாக நித்தியங்களை அருளும் ஒரு ஆலமரம் சித்தரிக்கப்படுகிறது . அதனை உணர்ந்தவன் எவனோ அவனே வேதங்களை உணர்ந்தவன் .

யுகபுருஷன் இம்மரம் பெளதீகமாக இருப்பதாக கூறவில்லை . இவ்வாறு சித்தரிக்கப்ப்டுகிறதே அதனை உணர்ந்தவனே வேதங்களை உணர்ந்தவன் என்கிறார் .

எவ்வாறு சித்தரிக்
கப்படுகிறது ? முதலாவது இம்மரம் ஒரு ஆலமரம் .

ஆலமரத்தை ஒரு மரம் என கூறமுடியாது . அது பண்மைகளின் தொகுதி – ஐக்கியம் அல்லது குழுமம் – ஆனாலும் பிரிந்திராமல் ஒரே மரமாகவே இருக்கவும் கூடியது .


ஏறக்குறைய அழிவில்லாதது .


அது பக்கவாட்டில் அடர்ந்து பரவக்கூடியது . அவ்வாறு பரவும் அதன் கிளைகள் ஒவ்வொன்றும் தனது விழுதை பூமியில் இறக்கி அதனை வேராக மாற்றி உணவை எடுத்துக்கொள்ளகூடியது . அதனால் ஒவ்வொரு கிளையும் தனித்த மரம் போலவே விருத்தியாகும் .


இம்மரம்போலவே வேதங்களும் இருக்கின்றன என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .


வேதமாகிய ஆலமரம் – உன்னதமாகிய பரத்திலே வேரை உடையது . பூமியில் இன்று நிலைத்துள்ள வேதங்கள் பல உள்ளன . அவைகள் இல்லாத இன்னும் சில வழிபாடுகளும் - கொள்கைகளும் சில காலம் பூமியில் பிரபலமாகவும் இருந்தன . அவைகளில் பல அழிந்தும் விட்டன . எவைகள் அழிவடையாமல் நிலைத்துள்ளனவோ அவை பரத்திலிருந்து வந்தவை . எவைகள் பரத்திலிருந்து வராமல் பூமியில் மனிதர்களின் சீரிய சிந்தனைகளால் – அல்லது உலகியல் மரபுகளிலிருந்து தோன்றியவையோ – அவைகள் நல்ல நோக்கத்துடனேயே துவக்கப்பட்டிருந்தும் அழிவை சந்தித்து விட்டன .


ஏறக்குறைய இந்துமதம் ; கிறிஸ்தவம் ; இசுலாம் தவிர ஏனைய பல மார்க்கங்கள் அழிந்தே விட்டன . அல்லது மேற்கண்ட மதங்களில் அமிழ்ந்து விட்டன . பெளத்தம் ; யூதம் ; சீக்கியம் ; பகாய் போன்ற உபமார்க்கங்கள் உள்ளன .


இவைகள் ஒன்றை ஒன்று அழிக்க எவ்வளவோ பகீரத பிரயத்தனங்கள் செய்யப்பட்டும் அழிவற்றவைகளாக நிலைக்கின்றன .


எப்படி வேத மரத்தின் மூல வேர் பரத்திலிருந்து பூமிக்குள் மரமாக வளர்ந்திருக்கிறதோ அதைப்போல அந்த மரத்தின் கிளைகளிலிருந்து தோன்றிய விழுத்களில் எவைகள் பரத்தை நோக்கி வளர்ந்து பரத்தில் வேர் விட்டதோ அந்த விழுதுகள் பரத்திலிருந்து ஜீவன் பெற்று தனி வேத மரம் போலவே ஆகிவிட்டன .


வேதமரத்தின் கிளைகள் பூமியில்தான் உள்ளன . ஏனெனில் வேதம் என்பதே பூமியில் உழலும் மனிதர்கள் நல்வழி பெற வேண்டும் என்கிற இறைவனின் சித்தத்தித்தின் வெளிப்பாடு .


பூமியில் மனித குலம் ; வாழ்விடம் சூழ்நிலை பொருத்து பழக்கவழக்கங்கள் ; பண்பாடுகளில் வித்தியாசம் இருப்பது இயல்பு . அந்த வித்தியாசங்களுக்கு ஒத்து இறைவனிடமிருந்து வரும் வழிகாட்டுதல் ஆகிய வேதங்களிலும் வித்தியாசம் இருக்கவே செய்யும் . அந்தந்த கிளைகளுக்கு விழுதுகள் பரத்திலிருந்து உணவை கிளைகளுக்கு ஏற்ப கொடுப்பதுபோல .


கலியுகத்தில் பூமி முழுதும் ஏறக்குறைய மூன்று இனங்கள் இருப்பதாக கொள்ளலாம் .


1)திராவிடம் 2) ஆரியம் 3) ஐரோப்பியம்
முந்தய ஜலப்பிரலயத்தின் மணுவாகிய நோவாவுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள் . இம்மூவருமே உலகின் இன்றைய மூன்று இனங்களாக பெருத்தார்கள் .

மூத்த மகனாகிய அப்பா சிந்து சமவெளியை தேடி வந்து திராவிட இனம் உண்டாயிற்று . இரண்டாவது மகன் சாமா யுப்ரட்டீஷ் சமவெளியில் நிலைத்து ஆரிய இனம் உண்டாயிற்று . மூன்றாவது மகன் காமா ஐரோப்பாவில் பெருத்தார்


திராவிடத்திற்கு இந்து மதமும் ; ஆரியத்திற்கு இசுலாமும் ; ஐரோப்பியத்திற்கு கிறிஸ்தவமும் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டவையாக இன்றும் நிலைத்துள்ளன .


ஆனால் இளம்பிள்ளை கோளாறு – முந்திரிக்கொட்டைத்தனம் என்னவென்றால் அந்த வேதங்களைக்கொண்டு அவரவர் இனத்தை சீர்படுத்தவே இன்னும் முடியாமல் இருக்கும்போது அடுத்த இனத்தின் மீது அடுத்த இனத்தை தினித்து இனவழிப்பு செய்யும் குழப்பங்களை மத மாற்றம் என்ற பெயரால் செய்வது மனிதர்களின் வேலையாகிவிட்டது .


வேதங்களின் உண்மைகளை மட்டும் இனவழிப்பு செய்யாமல் ஒருவரிடமிருந்து ஒருவர் சுவீகரித்தால் அது வளர்ச்சி . ஆனால் இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள நீ வெள்ளைக்காரனாக மாறவேண்டும் . இசுலாத்தின் அரூப வழிபாட்டை ஏற்றுக்கொள்ள நீ அரபியனாக மாறவேண்டும் என்று இனவழிப்பு செய்வதால் பிரச்சினை வருகிறது . தவறிலும் குழப்பத்திலும் போய் முடிகிறது .


இயேசுவை ஏற்றுகொள்ள எதற்காக ஐரோப்பியனாக மாறவேண்டும் .அவர் ராமராகவும் கிரிஷ்ணராகவும் இந்தியாவில்தானே அவதரித்தார் ? அவரின் உபதேசங்களை கிறிஸ்தவர்கள் கடைபிடித்ததை விட காந்திதானே அஹிம்சையாக வளர்த்தெடுத்தார் .


அருப வழிபாட்டிற்கு ஏன் அரபியனாக மாறவேண்டும் ? இந்தியாவில் ஆதியிலிருந்தே அருப வழிபாட்டுக்காரர்கள் – சித்தர்கள் ; ஞானிகள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள் .


அந்தந்த இனத்திற்கு மேற்கண்ட மூன்று மதங்களும் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை என்பது உண்மை . அது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவைகளில் மனித சரக்குகள் கலந்து விட்டன என்பதும் உண்மை .


ஆக அவரவர் மதத்திலேயே மனித சரக்குகள் – கலப்படங்கள் மலிந்துவிட்டது .அதை சீர்படுத்துவதுதான் அவரவர் பிரதான பணி . அடுத்தவரை சீர்திருத்துவதல்ல . இந்த பொதுநோக்கு வந்து விட்டால் எல்லா மதங்களும் பரத்திலே வேரை வைத்துக்கொண்டுள்ளன என்ற உண்மை புரியும் எல்லா மதங்களுக்கும் - வேதங்களுக்கும் மூல மரம் பரத்திலிருந்து முளைத்தது . அந்த மூல மரமே வேதங்களுக்கெல்லாம் வேதமானது . அவரே புருஷோத்தமன் – நாராயணன் – பரமாத்மா . அவரே காப்ரியேல் . மோசேக்கும் முகமதுவுக்கும் தரிசனமாகி ஆப்ரகாமின் வாரீசுகளுக்கு வேதத்தை கொடுத்தவரும் அவரே !


ஆனாலும் அந்த மூல மரத்திலிருந்து உலகம் முழுவதிலும் உலகம் உய்ய எண்ணற்ற கிளைகள் உள்ளன . அவைகளில் பலவும் சொந்த விழுதை நேரடியாகவே பரத்திலே வைத்துக்கொண்டும் உள்ளன . அவைகளே பலதரப்பட்ட குரு பாரம்பரியங்கள் . அவைகள் மூலமாக அந்தந்த சிஷ்ய கோடிகளுக்கு அவரவருக்கு உரிய உபதேசங்கள் . இத்தகு உபதேசங்களே கிளைகளில் பல ; பல இலைகளாக உள்ளன . இந்த இலைகளே எண்ணற்ற வேத பதங்கள் – சந்தாம்ஸி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .


சந்தம் என்ற வார்த்தையே இருக்கிற இடத்திற்கு ஒத்தது என்கிற அர்த்தத்தை தருவது . வேத பதங்கள் என்பதை சந்தாம்ஸி என்றே ஸ்ரீகிருஷ்ணர் உச்சரித்துள்ளார் . ஒத்து இசைந்து அதிலிருந்து விரிந்த பார்வையை தருபவையே வேதங்கள் என்பது இதன் அர்த்தம் . வேதங்கள் மாறாதவையல்ல . காலத்துக்கு காலம் அவைகள் செழுமைப்பட்டே ஆகும் . பல மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் . அதை புருஷோத்தமனோ அல்லது அவரின் நண்பர்களான ஆத்மாக்களோ (இறைதூதர்களோ) உலகத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மை .


ஸ்ரீகிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இன்னும் ஒரு முத்தாய்ப்பை சொல்கிறார் . இந்த உண்மையை – எல்லா மதங்களும் பரத்திலிருந்தே வந்தவை என்கிற உண்மையை எவனொருவனால் புரிந்து கொள்ள முடியுமோ அவனே வேதங்களை உணர்ந்தவன் . மற்றவன் மனப்பாடம் செய்து ஒப்பிப்ப்பவன் மட்டுமே . வறட்டு சூத்திரதாரி .

வானத்து உணவு ?

கீதை 15 : 2 கீழ்நோக்கியும் மேல்நோக்கியும் மற்றும் பலவாறாக விரிந்து பரந்த அதன் கிளைகள் ஜட இயற்கையின் முக்குணங்களாகும் . அதிலிருந்து கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்களால் பந்தப்பட்டு நிற்பவையாகும் .

வேதமரத்தின் ஒரு தன்மை – அதாவது பரத்தை நோக்கிய தன்மை – சத்வ குணம் - முந்தய சுலோகத்தில் விளக்கப்பட்டது . ஆனால் அதே மரத்தின் எஞ்சிய குணங்களும் இந்த சுலோகத்தில் விளக்கப்படுகின்றன . ரஜோ மற்றும் தமோ குணங்களால் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் ஆர்வமும் பந்தமும் உள்ளவைகளாக கீழ்நோக்கிய சிம்புகளும் விழுதுகளும் சித்தரிக்கப்படுகின்றன .

மூலமரம் பரத்திலிருந்து வளர்வதாக இருந்தாலும் ; ஆங்காங்கு பல விழுதுகள் பரத்திலே முளை விட்டிருந்தாலும் ; பெரும்பான்மையான சிம்புகளும் விழுதுகளும் உலகியல் ஆதாய செயல்பாடுகளில் உணவைப்பெருகின்றன .


மூலமரம் பரத்திலே இருந்தாலும் – பரமாத்மா பரத்திலே இருந்தாலும் அதிலிருந்து உலகியல் மாயைகளால் பந்தப்பட்டு ; ஜீவாத்மாக்களாக அனேக தனித்துவமுள்ள மரங்கள் அதில் உள்ளன . அவைகளில் பரத்தை நோக்கி விழுதை விடும் சில ஆத்மாக்கள் தவிர ஏனையவைகள் பூமியில் விழுதையும் சிம்புகளையும் உள்ளவைகளாக உள்ளன .


கீதை 15 : 3 உண்மையிலேயே இம்மரம் இவ்வுலகில் காணப்படக்கூடியதல்ல ; அதன் முடிவோ ; அதன் முளைகளோ அதன் அஸ்திபாரமோ காணப்படக்கூடியதுமல்ல . ஆனால் பூமியில் பலமாக நிலைத்துள்ள அதன் விழுதுகளை பற்றின்மை என்ற ஆயுதத்தால் உறுதியுடன் வெட்டி சாய்க்கவேண்டும் .

கீதை 15 : 4 அதன் பின்பு எங்கே சென்றவர்கள் திரும்ப பூமிக்கு வருவதில்லையோ அந்த பரத்தை அடைய ; அங்கேயிருந்து யாரால் எல்லாம் தொடங்குகிறதோ ; யாரிடமிருந்து எல்லாம் விரிவடைகிறதோ அந்த பரம புருஷனாகிய சற்குருவிடம் சரணடையவேண்டும் .

அடையார் ஆலமரம் என்பது அதன் விரிவுக்கும் ஆயுளுக்கும் பேர்போனதாக இருந்தது , நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அந்த மரத்தை காட்சிப்பொருளாக கண்டுகளிக்க கூட்டம் வந்தது . பல விழுதுகளால் அது பெரிய இடத்தை ஆக்கிரமித்து இருந்தது . அந்தோ ஒரு நாள் மூலமரம் செத்துவிட்டது . அதனால் பல விழுதுகள் அந்த மரத்தை தாங்கி வந்தும் நிற்க முடியாமல் சாய்ந்து விட்டது . அதன் பிறகு செயற்கையாக இப்போது அதை முட்டுகொடுத்து காத்து வருகிறார்கள் .

ஏன் சொல்கிறேன் என்றால் விழுதுகளைப்போல பல்லாயிரம் மனிதர்கள் இருக்கிறோம் . பார்க்க ஜீவன் உள்ளவர்கள் போல இருந்தாலும் ; மூலமரம் நம்மை நம்மை இழுத்து பிடிக்காவிட்டால் நாம் அழிந்து விடுவோம் .


கலியுகத்தில் நாராயண அவதாரமான சற்குரு இயேசு சொல்வதை கேளுங்கள் ;

யோவான் 15 :

4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

5. நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.

6. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

யோவான் 6 :

27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்

51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ போஜனம் ; இந்த போஜனத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்

இயேசு என்றதும் குய்யோமுறையோ கிறிஸ்தவனாக வேண்டுமோ என கூகுரல் கொடுக்கலாகாது . அது ஐரோப்பியர்களுக்கு மட்டுமே ; நமக்கோ அவரின் முந்தய பிறவிகளான ராமர் ; கிரிஷ்ணரை சார்ந்துகொண்டாலே போதுமானது .

நாம் பூமியிலே விழுதுள்ள மனிதர்கள் என்ற நிலையிலிருந்து பரத்திலே விழுதுள்ள மனிதர்களாக மாறி ; வானத்திலிருந்து வரும் உணவை எடுப்பவர்களாக மாறினால் மட்டுமே நித்திய ஜீவனுள்ளவர்களாக பரத்திற்கு செல்லமுடியும் . அதற்கு சற்குருவான நாராயணனை சார்ந்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும்

மார்க்க பேதங்கள்
கீதை 15 : 8 காற்றானது அது உரசும் பொருட்களின் நறுமணத்தை சுமந்து செல்வதைப்போலவே ஆத்மாவும் அது வாழும் உடலால் உண்டாகும் அனுபவங்களை சுமந்து செல்கிறது . ஒரு உடலை துறந்தால் மொத்த அனுபவங்களுக்கு ஒத்த உடலை அடைகிறது .

கீதை 15 : 9 மனதை மையமாகக்கொண்டு காது ; கண் ; நாக்கு ; மூக்கு ; தொடுபுலன் உள்ள புதிய சரீரத்தில் நிலைபெற்று அந்த சூழ்நிலையின் புதிய அனுபவங்களை பெறுகிறது .

இங்கு ஆத்மாவின் மிக முக்கியமான இயல்பு விளக்கப்பட்டுள்ளது . காற்று துய்மையானதாக இருந்தாலும் அது எதை உரசியதோ அதைப்போலவே மணம் காற்றைப்பற்றிக்கொள்கிறது . அந்த மணத்தை அது கொஞ்ச தூரம் சுமந்தே ஆகவேண்டும் .

ஆத்மாவும் அதைப்போன்றதே . ஆத்மாவை மாநகர குப்பைக்கிடங்கு என்றே சொல்லலாம் . அதில் விழுகிற – கொட்டப்படுகிற எதையும் அது வாங்கிக்கொள்ளும் . அது முடியாது என வெளியே தள்ளுவதே இல்லை .


ஒரு பயங்கரமான உண்மை ; அது கேள்விப்பட்ட எந்த விசயமும் ஆத்மாவுக்குள் ஒளிந்திருந்து சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்க்கும்போது தீடீரென வெளியே வந்து விடும் . நானா இப்படி செய்தேன் ; நான் எப்படி இதை செய்தேன் என எனக்கே விளங்கவில்லை என்று நாமே பல முறை சிண்டை பிய்த்துக்கொள்வதில்லையா அது என்றைக்கோ பொழுதுபோக்காக நண்பர்களோடு அரட்டை அடித்த விசயமாக இருக்கும் .


நம் ஆத்மாவில் நாம் பார்த்த ; கேள்விப்பட்ட ; பேசிய விஷயங்கள் – அனுபவங்கள் – சம்ஸ்காரங்கள் – உள்ளே போய் பொதிந்து ஒளிந்து கொள்ளும் . நமக்குள் என்ன இருக்கிறது என்பது நமக்கே தெரியாது . கடவுளுக்கும் ; தேவர்கள் அசுரர்களான ஆவி மண்டல சக்திகளுக்கும் மட்டும் தெரியும் . சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கினால் நம்மிடமிருந்து அதனை வெளியே கொண்டு வர வைக்கமுடியும் . அதனால்தான் தவறு செய்தவர்களை பார்க்கும்போது அவர்களைப்பற்றி காரிகாரி துப்பக்கூடாது என்கிறார் யுகபுருஷன் இயேசு .


இப்படி இருக்கக்கூடாது என எண்ணலாம் ; அவர்களால் தீங்கு வராமல் காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டுமோ செய்யலாம் ; ஆனால் அவர்களை நியாயம் தீர்க்க – காரித்துப்ப மனிதனுக்கு அதிகாரம் கிடையவே கிடையாது .


அப்படி நாம் யாரை குற்றவாளி என நியாயம் தீர்த்தோமோ அதே மாதிரி தவறை சந்தர்ப்ப சூழ்நிலையில் நாமும் செய்து கேவலப்பட்டு நிற்க வைத்து கடவுள் நமக்கு பாடம் கொடுப்பார் .


மிகச்சமீபத்தில் கடவுள் எனக்கு உணர்த்திய விஷயம் ; இந்து தீவிர மதவாதிகளாக இருந்து இசுலாத்தை காரிகாரி துப்புகிற பலர் முந்தய பிறவியில் முஸ்லீம் தீவிரவாதிகளாக இருந்து மற்ற மதங்களை காரிகாரி துப்பிக்கொண்டிருந்தவர்களே . இன்றைக்கு முஸ்லீம் தீவிரவாதிகள் பலரும் முந்தய பிறவியில் இந்து தீவிரவாதிகளாக இருந்தவர்களே .


இவர்கள் ஒரு விசயத்தில் தெளிவில்லாமல் இருக்கின்றனர் . எவ்வப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் தர்மத்தை நிலைநாட்ட பூமியில் அவதரிக்கிறேன் என்று பரமாத்மா சொன்னாரே அதை வாசிக்கிறார்கள் . அதில் அதர்மத்தை அழிப்பதும் தர்மத்தை நிலைநாட்டுவதும் பரமாத்வாவின் வேலை என்றுதானே சொன்னார் ; அது நம்மைபோன்ற ஜீவாத்மாக்களின் வேலை அல்ல என்பதை உணர மறுக்கிறார்கள் .


அல்லா நேரடியாக தரிசனம் ஆகி ஜிஹாத் செய்யச்சொன்னதால் முகமது குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட மக்கள் மீது போர் செய்தார் . அது குற்றமாகாது . ஏனென்றால் அல்லா அவரிடம் நேரடியாக தெரிவித்தார் .


ஆனால் அல்லா முகமதுவிடம் நேரடியாக சொன்னதை இன்றைக்கு குரானில் வாசித்துவிட்டு பிறர் மீது ஜிஹாத் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை . ஏனென்றால் அல்லா உங்களிடம் நேரடியாக சொல்லவில்லை .


எழுதப்பட்ட ஒன்றை ஒவ்வொருவரும் தங்களுக்கு தகுந்த மாதிரி குறைவான அர்த்தத்திலேயே புரிந்து கொள்ளமுடியும் . யாரும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது .


தங்களுக்கு தகுந்த மாதிரி குறைவாக புரிந்துகொண்டதை அல்லா தங்களுக்கு சொன்னதாக எடுத்துக்கொண்டு சன்னி முஸ்லீம்கள் ஷியா முஸ்லீம்களை கொல்கிறார்கள் ; ஷியா முஸ்லீம்களும் அல்லாவின் பேரை சொல்லிக்கொண்டே சன்னி முஸ்லீம்களை கொல்கிறார்கள் . இதில் கோளாறு எங்கிருக்கிறது ?


தாங்கள் பக்தி செய்வது தங்கள் ஆத்மாவை ஒளியூட்டுவதற்கு என்பதை மறந்து தாங்கள் பக்தி செய்தவருக்கு தாங்கள்தான் ஏஜண்டுகள் – குத்தகைதாரர்கள் என்ற மனப்பாண்மைக்கு மனிதர்கள் வருவதே கோளாறு .


நம் ஆத்மாவை விட்டு சம்ஸ்காரங்களை நீக்கி தூய்மையடைவதும் ; அப்படி நாம் அடைந்த வெளிச்சம் ஒருவேளை அடுத்தவரையும் வெளிச்சமடைய வைக்குமானால் அதுவே நம்மிடம் இறைவன் எதிர்பார்க்கும் வேலை . ஒரு மார்க்கத்தைக்கொண்டு ஒரு மார்க்கத்தை அழிப்பது அல்ல .


ஒருமார்க்கத்தில் தீவிரவாதம் செய்துகொண்டே தன் ஆத்மாவின் உள்ளொளியை பெருக்குதல் என்பதில் முன்னேறாத ஆத்மாக்கள் பல அடுத்த பிறவியில் அடுத்த மார்க்கத்தில் பிறந்து முந்தய மார்க்கத்தை காரித்துப்புகிறார்கள் . இப்படியே செக்கு மாடுபோல இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருக்கிரார்களே தவிர இறைவனை நோக்கி ஒரு தம்பிடியாவது முன்னேறுவதே இல்லை .


ராமரை கிரிஷ்ணரை பக்தி செய்கிறாயா அவரை சார்ந்து கொண்டு உள்ளொளியை பெருக்குவது மட்டுமே நமது வேலை ; சிவனை பக்தி செய்கிறாயா அவரை சார்ந்து கொண்டு உள்ளொளியை பெருக்குவது மட்டுமே நமது வேலை ; இயேசுவை பக்தி செய்கிறாயா அவரை சார்ந்து கொண்டு உள்ளொளியை பெருக்குவது மட்டுமே நமது வேலை ; அல்லாவை பக்தி செய்கிறாயா அவரை சார்ந்து கொண்டு உள்ளொளியை பெருக்குவது மட்டுமே நமது வேலை .


நம் ஆத்மாவை எப்படி சுத்தம் செய்வது ; அதற்குத்தான் நாம் ஒருவர் மீது பக்தி செய்கிறோம் என்ற தெளிவை மறந்து நாம் பக்தி செய்கிறவருக்கு நாமே குத்தகைதாரர் என்ற மன நிலைக்கு மனிதர்கள் வந்து விடுகிறோமே அதில்தான் கோளாறு வந்துவிடுகிறது .


கீதை 15 : 10 ஒரு உடலை நீத்து இன்னொரு உடலில் குடிகொண்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்பவும் இயற்கை குணங்களின் மயக்கத்தினால் ஆட்பட்டும் ஆத்மா தற்போது எதைச்செய்து கொண்டுள்ளது என்பதை முட்டாள்கள் உணர்வதில்லை ; ஞானத்தை உணர்ந்தோரே தெளிவடைவர் .

கீதை 15 : 11 ஆத்ம உணர்வில் நிலைபெற்று ; மேலும் யோகத்தில் முயற்சி செய்வோர் மட்டுமே இதை உணரமுடியும் ஆத்ம உணர்வு பெறாதவர்களும் ; மன முதிர்ச்சி இல்லாதவர்களும் இதை உணர்வதில்லை .

கீதை 15 : 12 உலகம் முழுவதிலும் இருளை விளக்குகிற சூரியனின் பிரகாசமும் ; சந்திரனின் பிரகாசமும் ; நெருப்பின் பிரகாசமும் என்னிடமிருந்தே வருகின்றன என்பதை புரிந்து கொள்வாயாக .

உலகம் முழுவதிலும் ; அனைத்து இனமும் இறைவனாலேயே தோற்றுவிக்கப்பட்டன . அனைவருமே இறைவனின் பிள்ளைகளே . அந்த அன்புத்தகப்பனே அனைவரும் உய்யும்படியாக அவர்களுக்கு அவ்வப்போது வழிகாட்டுதலும் வேதமும் அருளுகிறான் .

வேதம் என்பதே நாராயணனிடமிருந்து வருவது மட்டுமே . அப்படியானால் அனைத்து மதமும் அவரிடமிருந்தே அந்தந்த இனத்திற்கு வந்தது . அதை அவரவர்கள் கடைபிடிப்பதை விட்டுவிட்டு அடுத்த இனத்தின் வேதத்தை காரித்துப்புவதும் அழிக்க முயற்சிப்பதும் அறிவீனம் . அதை விட அறிவீனம் இறைவனுக்கு தொண்டு செய்வதாக நினைத்துக்கொண்டு அடுத்த இனத்தின் வேதத்தை அழிக்க முயற்சிப்பதுவே .


பல மார்க்கங்களை இறைவன் ஆங்காங்கே கொடுத்தார் என்றால் அதை பின்பற்றுகிற மனிதர்கள் மார்க்கபேதங்களை உண்டாக்குவது இயல்புதானே . அப்படியானால் அதை சீர்படுத்துவதும் இறைவனிடமிருந்து வந்துதானே ஆகவேண்டும் .


ஆம் . அதுதான் சமரச வேதம் .


இறைவன் புறத்திலிருந்து மார்க்கபேதங்களை சமரசப்படுத்த சமரச வேதம் வந்துதான் ஆகவேண்டும் .

பல தீர்க்கதரிசனங்கள் அதை முன்னறிவித்துள்ளன


நாராயணன் பூமியில் அவதரித்த போதெல்லாம் அவரோடு பூமியிலிருந்த மனித ஆத்மாக்களில் ; அவரின் அன்புக்கும் பிரியத்துக்கும் ஆளான ஆத்மாக்கள் மூலமும் வேதம் வந்திருக்கிறது


ராமாவதாரத்தில் குகனாக - ஏன் சகோதரன் என கட்டியணைக்கப்பட்டவரே கிரிஷ்ணாவாதரத்தில் குசேலனாக இருந்தார் . அவரே இயேசு அவதாரத்தில் அவரின் பிரியமான சீடன் ஜானாகவும் இருந்தார் . அவரே காந்தியாகவும் வந்து இயேசுவின் சமாதான உபதேசத்தை அஹிம்சையாக வளர்த்தெடுத்தார் .


அவரே வரப்போகிற சமரச வேதத்தின் இறைதூதராக வெளிப்படவும் உள்ளார் . அதுவும் ஆதி பாஷையான தமிழராகவே அவர் பிறந்து உலகம் முழுதும் சமரசத்தை - சமாதானத்தை உண்டாக்குவார்

பரத்திற்கு வாக்களிக்கப்பட்டோர் யார் ?

கீதை 15 : 13 எனது சக்தியால் பூமியையும் அதில் உயிர் வாழ்பவைகளையும் நானே தாங்கிக்கொண்டுள்ளேன் . மேலும் சந்திரனின் ஒளியால் பூமியில் மன நலம் தரும் மருந்தாகிய ரசத்தை வழங்குகிறேன் . மேலும் ஆத்மாக்களின் மனதினுள் நுழைந்து நானே செம்மையும் படுத்துகிறேன் .

கீதை 15 : 14 பூமியில் வாழ்கிறவைகளின் உடலுக்குள் ஜீரணிக்கும் நெருப்பாக நானே நிலைபெற்று உட்சுவாசம் மற்றும் வெளிசுவாச காற்றை சமப்படுத்தி நான்கு விதமான உணவுகளையும் செரிக்கச்செய்கிறேன் .

கீதை 15 : 15 எல்லோருடைய இதயத்திலும் மனமாக நானே வீற்றுள்ளேன் . அவர்களுக்கு வாழ்வு நெறிகளும் ; ஞானமும் ; கேடுகளும் என்னாலேயே அருளப்படுகின்றன . ஒருவனை வேதத்தை அறியச்செய்து அவற்றை தொகுத்துணர வைக்கிறவனும் நானே என்பதை தெளிந்து கொள்க .

ஒரு பிரகாசம் உலகம் முழுவதையும் பிரகாசிக்கசெய்யும் ; கொஞ்சம் சுட்டெரிக்கவும் செய்யும் ; கண்டித்து உணர்த்தும் – தகப்பனைப்போல – அதுவும் வேதமே .

இன்னொரு பிரகாசம் குளிர்ச்சியானது . நொந்து போன மனதை ஆற்றித்தேற்றி தாலாட்டு பாடி புத்துணர்ச்சி அளிக்கும் – தாயைப்போல – அதுவும் வேதமே .


இன்னொரு பிரகாசமா தற்காலிகமானது – அந்த இடத்திற்கு மட்டுமே ஒளி தரக்கூடிய நெருப்பு – அல்லது கதகதப்பை தருவது – அல்லது சமைக்க உதவும் – அது நம்மால் செயற்கையாக உண்டாக்கபடவேண்டும் – பூமிக்குரிய வாழ்வை நிர்வகிக்க தேவையான அறிவு – சமுதாய சட்டங்கள் - அதுவும் வேதமே .


இந்த மூன்று வேதங்களாகவும் நாராயணனே உள்ளார் . அதுமட்டுமல்ல பூமிக்குரிய வாழ்வில் எழும் முரண்பாடுகள் ; கவலைகள் ; தேவைகள் ; ஏக்கங்கள் ; தோல்விகள் ; சோகங்கள் இவற்றில் மன நலத்தை தரும் ரசம் சந்திரனின் இயக்கத்தாலேயே மனிதர்களுக்கு கிடைக்கிறது . மனதை ஆற்றித்தேற்றி அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பரிபக்குவம் கொடுப்பதும் பரமாத்மாவே .


உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை மட்டுமல்ல மனமாக - ஜீவாத்மாவாக செயல்படுவதும் ; வாழ்வை ஊக்கப்படுத்துவதோ ; கேடுகளை தருவதோ ; அதிலிருந்து பட்டறிவின் மூலமாக ஞானத்தை விளையவைப்பதும் பரமாத்மாவே .


கீதை 15 : 16 உலகில் வாழும் ஆத்மாக்களில் பரத்திற்கு வாக்களிக்கப்பட்டவர்கள் (நல்வழிப்பட்டோர் - நன்மைகளின் பக்கம் உள்ளோர்) ; பரத்திற்கு வாக்களிக்கப்படாதவர்கள் (நல்வழிப்படாதவர்கள் - தீமைகளின் பக்கம் உள்ளோர்) என்ற இரண்டு பிரிவினர் உள்ளனர் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த இரண்டு அம்சங்களும் கூடியும் குறைந்தும் உள்ளன .

நன்மைகள் தீமைகள் என்ற இரண்டு இயல்புகளும் கலந்தே எந்தவொரு மனிதனும் உள்ளான் . இதில் ஆத்மாவில் நன்மைகளின் இயல்பு பெருக்கியுள்ளோர் எவரோ அவரே நல்வழிப்பட்டோர் .பரத்திற்கான உறுதியை – அட்சாரத்தை பெற்றுக்கொண்டவர்கள் . அரபு பாஷையில் இசுலாத்தில் உள்ளோர் . ஆதி மனிதர்கள் தூய இசுலாத்தில் நடந்தார்கள் என்றொரு வசனம் குர்ஆனில் உள்ளது . அந்த ஆதி மனிதர்கள் சிவன் (ஆதாம்) உள்ளிட்ட கிருத யுகத்து மாந்தர்களான லெமூரியா கண்டத்து தமிழர்களே .

ஆதி தமிழர்களின் சனாதன தர்மமே ஆதி இசுலாம் என குரான் சுட்டுகிறது . தாடியும் மீசையும் வைத்துக்கொண்டு அரபியனைப்போல ஆகி ஐந்து முறை குனிந்து வளைந்து உடற்பயிற்சி செய்து கொண்டே ஓதி விட்டால் மட்டுமே அது இசுலாம் அல்ல . இறைவனுக்கு உகந்து வாழும் நெறியை – தன்னை உணர்ந்து தனது குறைகளை களைந்து மனதிலே மாசற்றவனாக நன்மைகளின் பக்கம் வாழ கற்றுக்கொண்டவனே பரத்திற்கு வாக்களிக்கப்பட்டவன் . தான் சரீரமல்ல ; ஆத்மா என்ற தெளிவிலே பூமியில் தண்ணீரில் தாமரை இலைபோல வாழ கற்றுக்கொள்பவனே இசுலாத்தில் உள்ளவன் .


கீதை 15 : 17 இந்த இரண்டு வகையினருக்கும் உள்ளும் புறம்பும் அப்பாற்பட்டும் பரமாத்மா எங்கும் நிறைந்துள்ளார் . இம்மூவருக்குள்ளும் அழிவற்ற உயிராக இறைவன் இருந்து லோகத்தை காக்கின்றார் .

கடவுள் சகலருக்குள்ளும் உயிராக இருப்பவர் . அரூபமானவர் . அவரின் வெளிப்பாடு பரமாத்மா – நாராயணன் – ஆப்ராகமிய வேதங்களில் காப்ரியேல் – ஜிப்ரீல் . இவர் அருப உரூபி . இவரே ராமராகவும் கிரிஷ்ணராகவும் இயேசுவாகவும் பூமியில் வந்து வேதங்களை வழங்கியவர் . முஹமதுவுக்கு ஆவி ரூபமாக தரிசனமாகி முகமது மூலமாக குரானையும் ஓதியவர் . ஆத்மாவுக்கும் வேதங்களுக்கும் சற்குரு இவரே . பரமாத்மாவுக்குள்ளும் அவரால் பூமியில் உண்டான நல்லோர் மற்றும் தீயோர் என்ற ஜீவாத்மாக்களுக்குள்ளும் உயிராக இருப்பவர் அருபமான கடவுள் .

இயேசு கடவுளைப்பற்றி சொன்னார் :

மத்தேயு 5:45 உங்கள் பரம பிதா தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

கடவுள் எப்படி சற்குணரோ அப்படியே அவரின் வெளிப்பாடாகிய பரமாத்மாவும் சற்குணரரே . ஆனால் இந்த பரமாத்மாவே ஜீவாத்மாக்களாக பின்னப்பட்டு நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் இருக்கிறது . ஆனாலும் அவைகளால் களங்கப்படாமல் திவ்யமாகவும் இருக்கிறது . இவரே உத்தம புருஷன் . அதாவது புருஷோத்தமன் . கடவுள் உத்தமர் என்றால் பரமாத்மா உத்தம புருஷன் .

கீதை 15 : 18 நல்வழிப்பட்டோர் ; நல்வழிப்படாதோர் ஆகிய இருவருக்கும் அப்பாற்பட்டு நானே உத்தமமானவனாகவும் – எதனாலும் களங்கப்படாதவனாகவும் ; திவ்யமானவனாகவும் இருப்பதால் உலகில் வந்துள்ள வேதங்கள் அனைத்திலும் புருஷோத்தமனாக கொண்டாடப்படுகிறேன் ..

கீதை 15 : 19 எவனொருவன் என்னை சற்குருவாகிய பரமபுருஷன் என்பதை உணர்ந்து எனது குருகுலத்தில் பக்தி தொண்டாற்றுகிறானோ அவனே எல்லாவற்றையும் உணர்ந்தவனாவான் – நிறை ஞானம் பெறுவான் .


ராமர் என்ற கிரிஷ்ணர் என்ற இயேசு சொன்னார் ;
யோவான் 10:7 இயேசு அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

யோவான் 10:14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா (கடவுள்) என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

யோவான் 7:29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.

யோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

கீதை 15 : 20 இவ்வாறு மிகமிக ரகசியமான சத்தியம் என்னால் உனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது . இதனை புரிந்துகொள்பவன் மட்டுமே ஞானவான் ஆவான் . அவன் சகலத்தையும் உணர்ந்து பாவங்களை களைந்து பரிபக்குவத்தை அடைவான் .

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி