கீதை 2:14 ஓ!குந்தியின் மகனே!பருவ காலங்கள் எப்படி தோன்றிமறைகிறதோ அப்படியே இன்பமும் துன்பமும் தோன்றிமறைகிறது! மாறிமாறி வருகிறது!இது புலன்களின் உணர்ச்சியினால் நிலையானது போல தெரிகிறது!இவைகளால் பாதிப்படையாத-- புலன்களை கடந்த மன நிலையை கற்றுக்கொள்ளவேண்டும்!
2:15 மனிதர்களில் சிறந்தவனே!யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிப்படையாத மனநிலையை பெறுகிறானோ,மன சமநிலையை அடைகிறானோ அவனே இறைவனை நெருங்க தகுதி அடைகிறான்
உலகபந்தங்கள் துன்பதுயரங்களிலிருந்து விடுபட்டு ஆத்துமசுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமா?
வெற்றிகளில் துள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும்
வெற்றிக்கு இறைவக்கு நன்றி செலுத்திவிட்டு நகன்றுவிடவேண்டும் வெற்றியில் தேங்கிநின்று கொண்டாட நம் மனம் பழகும்போது தோல்வியில் தேங்கிநின்று துயறத்திலும் களிவிறக்கம்படவும் தொடங்கிவிடும் கடவுளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்
வெற்றியில் நன்றி தெறிவித்த பக்தனுக்கு துன்பத்தில் உதவவேண்டிய நெருக்கடி இறைவக்கும் உண்டாகிவிடுகிறது
நாம் மனச்சமநிலை அடைவது நம் பக்தியின் நிறைவுக்கு ஒரு அடையாளமாகும்
கோடையின் வெப்பம் நம்மை வாட்டி வதக்கும் போது அது
நிலையானது போல தெரிகிறது!பனியில் நாம் உறைந்து போய் விடுவோம் போல
உணர்கிறோம்!ஆனால் அது உண்மையல்ல!
நம் புலன்கள் நுகர்வுணர்ச்சிக்கு நம் சக்தியை மனமானது செலவளித்துக்கொண்டே இருப்பதால் நாம் சோர்ந்துபோய் விடுகிறோம்!அதை உணர்கிற நமது மனம் தான் நம் சோர்வுக்கு காரணமே தவிற புற காரணிகள் நம்மை வருத்துவதில்லை!
அது சில நாளில் கடந்துவிடும் என்கிற நம்பிக்கை-அறிவை இழந்து நம் மனமானது விரக்தியில் ஒடுங்குகிறது!மேலும் இந்த மனமானது தான் ஆத்துமா என்பதை மறந்து சரீரத்தின் புலன் உணர்வுகளுக்கு மதிமயங்கி தன்னை சரீரமாகவே நினைத்துக்கொண்டுள்ளது!
அழிவுள்ள சரீரத்தில் வாசம் செய்கிற அழிவற்ற ஆத்துமா நான் என்கிற மெய்யறிவு அதற்கு மங்கி தன் பலமறியாமல் --ஆத்துமபலம் இழந்து சரீரத்திற்க்கு அடிமையாகி உலக சுகதுக்கங்கள் என்கிற குட்டையில் உழண்று கொண்டுள்ளது!
சரீரம் அழிவுள்ளது ஆனால் ஆத்துமாவோ நியாயத்தீர்ப்பு நாள் வரை அழிவற்றது!உலகில் நம் சரீரத்தை அழிக்க பலவற்றால் முடியலாம்!நாம் பயப்பட வேண்டியுள்ளது!
உண்மை யாதெணில் இறைவன் அணுமதித்தாலொழிய நம் சரீரத்தை யாராலும் அழிக்க முடியாது;ஆனால் நம் ஆத்துமாவை இறைவனைத்தவிற யாராலும் அழிக்கவே முடியாது!
நம் புலன்கள் நுகர்வுணர்ச்சிக்கு நம் சக்தியை மனமானது செலவளித்துக்கொண்டே இருப்பதால் நாம் சோர்ந்துபோய் விடுகிறோம்!அதை உணர்கிற நமது மனம் தான் நம் சோர்வுக்கு காரணமே தவிற புற காரணிகள் நம்மை வருத்துவதில்லை!
அது சில நாளில் கடந்துவிடும் என்கிற நம்பிக்கை-அறிவை இழந்து நம் மனமானது விரக்தியில் ஒடுங்குகிறது!மேலும் இந்த மனமானது தான் ஆத்துமா என்பதை மறந்து சரீரத்தின் புலன் உணர்வுகளுக்கு மதிமயங்கி தன்னை சரீரமாகவே நினைத்துக்கொண்டுள்ளது!
அழிவுள்ள சரீரத்தில் வாசம் செய்கிற அழிவற்ற ஆத்துமா நான் என்கிற மெய்யறிவு அதற்கு மங்கி தன் பலமறியாமல் --ஆத்துமபலம் இழந்து சரீரத்திற்க்கு அடிமையாகி உலக சுகதுக்கங்கள் என்கிற குட்டையில் உழண்று கொண்டுள்ளது!
சரீரம் அழிவுள்ளது ஆனால் ஆத்துமாவோ நியாயத்தீர்ப்பு நாள் வரை அழிவற்றது!உலகில் நம் சரீரத்தை அழிக்க பலவற்றால் முடியலாம்!நாம் பயப்பட வேண்டியுள்ளது!
உண்மை யாதெணில் இறைவன் அணுமதித்தாலொழிய நம் சரீரத்தை யாராலும் அழிக்க முடியாது;ஆனால் நம் ஆத்துமாவை இறைவனைத்தவிற யாராலும் அழிக்கவே முடியாது!
மத்தேயு10:28. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவை நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். -இயேசு
ஆத்துமா அழிவற்றது என்கிற மெய்யறிவும் அதன் ஆத்துமபலத்தை பெருக்கி சரீர ஆளுகையிலிருந்து விடுபடுவதும் கடவுளை நெறுங்கி செல்வதற்க்கு பாதையாகும்!
கீதை 2:58 ஆமை தன் அவயங்களை தன் ஓட்டிற்க்குள் இழுத்துக்கொள்வதைப்போல; யார் தன் சரீர புலன்களை, உணர்வுகளை தூண்டும் உலக காரணிகளிலிருந்து விவித்துக்கொள்ளுகிறானோ அவனே மெய்யறிவில் நிலைத்தவனாவான்!
ஆமையானது ஓட்டிற்குள் வாசம் செய்கிறது அந்த ஓட்டை சுமந்து திரிகிறது பார்ப்போர் அந்த ஓடு தான் ஆமை என நினைக்கின்றனர்!ஆனால் அந்த ஓடு அல்ல அந்த ஓட்டிற்க்குள் ஆமை இருக்கிறது!அது சாதகமான சூழ்னிலையில் ஓட்டிலிருந்து தன் அவயங்களை நீட்டி இந்த உலகில் இயங்குகிறது!சாதகமற்ற சூழ்னிலையில் ஓட்டிற்க்குள் தன்னை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளுகிறது
உலகத்திடமிருந்து தன்னை விவித்துக்கொள்ளுகிறது!அந்த ஆமையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் படி இறைதூதர் கிருஸ்ணர் வழிகாட்டுகிறார்!
அழிவற்ற ஆத்துமா நான் என்பதை உணர்ந்து அழிவுள்ள சரீரத்தில் சில நாள் வாசமாயிருக்கிறோம்;அது நமது ஓடே தவிற சரீரமும் சரீரத்தின் மூலம் நம்மை மயக்குகிற உலக மாயைகளும் இச்சைகளும் பந்தங்களும் நாமல்ல என தெளியவேண்டும்
புற உலக காரணிகள் எதுவும் நம் ஆத்துமாவை நாம் அதற்கு இடம்கொடுத்தாலொழிய நம்மை மயக்கவும் எதுவும் செய்ய சக்தியற்றவை!
கீதை 2:23 இந்த உலகத்தின் எந்த கருவியாலும் ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டவே முடியாது;தீயினால் எரிக்க முடியாது அல்லது தண்ணீரில் கறைக்கமுடியாது;பெருங்காற்றினாலும் துகள்துகளாய் பறக்கடிக்க முடியாது!
கடவுள் உருவாக்கிய பரமாத்மா--அவரில் கடவுளால் உருவாக்க பட்டு அவரால் மட்டுமே அழிக்கபடக்கூடிய நான் ஜீவாத்மா என்பதை உணர்ந்து அவரோடு பக்தி பூண்ட மனிதன்--தன்னை உணர்ந்தவன் இந்த சரீரத்தை அடக்க கற்றுக்கொள்ளுகிறான்!
உலகத்தின் அதிபதியாகிய அசுரன் சரீரத்தை மயக்கி ஆத்துமாவை ஆள முயற்ச்சிக்கிறான்!ஆத்துமா மெய்யறிவிலும் கடவுளிலும் நிலைத்து பேரின்பத்தில் திளைத்து பழகிவிட்டால் அசுரனின் சிற்றின்ப மாயங்கள் எடுபடாமல் போய் விடும்!
நிறை பக்தன் சரீரத்தை அடக்கி வெற்றி பெருகிறான்!அல்லது சரீரத்தை கடந்தவனாகிறான்! இங்கு சரீரத்தை மையமாக வைத்து `யுத்தகளம்` ஒன்று இறுதி நாள் வரை உள்ளது என்பது தான் `குருஸேத்திர யுத்தம்` என உருவக படுத்த படுகிறது!
யுத்த களத்தில் எதிரிகள் அசுரனும் அவனின் உலக மாயைகள் --இன்பதுன்பம்,பட்டம்பதவி,அதிகாரம்ஆணவம்,ஆசைதேவைகள்,அன்புவெறுப்பு என சரீரத்தை(தேரை) கவர்ந்து இழுத்து அதன் மூலம் ஆத்துமாவை ஆளுகை செய்வது அசுரனின் அணி!
தேரில் வீற்றிருக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா அந்த தேரை இறைதூதனாகிய கிருஸ்ணரிடம் வழி நடத்த ஒப்படைத்தால் இறைதூதர் கடவுளின் வேதத்தை உபதேசித்து போரில் வெற்றி பெறச்செய்வார்!
இண்ணொரு உருவகமும் உள்ளது!
ஒரு மனிதனின் ஆவி,ஆத்துமா,சரீரத்தில் அவனது ஆவி--உயிரே தேரோட்டீ!கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனின் உயிராக ஓடிக்கொண்டு உள்ளது இந்த ஆவி எடுத்துக்கொள்ள பட்டால் சரீரம் அழிந்து ஆத்துமா நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரைக்கு போய் விடும்!
எனவே ஒரு மனிதனுக்கு கடவுளை நெருங்கிய ஒரு பொருள் அவனது ஆவி-உயிரே! அந்த உயிரில் ஆத்துமாவை ஒடுக்கி தியானம் அப்பியாசித்து வந்தால் உயிருணர்வு பெருகி கடவுளின் அருள் ஆத்துமாவில் பலம் பெருகும்!அப்போது சரீரத்தின் பின் செல்லுகிற ஆத்துமா சரீரத்தை அடக்கி கடவுளின் பின் செல்லுகிற ஆத்துமாவாக மாற்றம் பெரும்!
கடவுளோடு உறாவாடுகிற-பிரார்த்திக்கிற மன நிலை எளிதில் சித்திக்கும்!இறைதூதர்கள் மூலம் வந்த வேதம் ஆழமாக புரிந்து ஜீவனோடு கடைபிடிக்க ஏதுவாகும்!இல்லாவிட்டால் இறைதூதர்கள் கொண்டுவந்த வேதத்தை கையிலே வைத்துக்கொண்டு சடங்காச்சாரமாக புரிந்து கொண்டு நுனிப்புல் மேய்ந்து கொண்டு நான் பெரிசு நீ பெரிசு என மதச்சண்டை போட ஊக்குவிக்கிற அசுர மாயையில் உலகம் மீண்டும் போய் விழுந்து விடும்!
யோகம் 2: சாங்கிய யோகம் !!!
அழியும் உடம்பினுள் உறையும் ஆத்துமா அழிவற்றது !!
கீதை 2:10 அப்போது கொந்தளிக்கிற சேனைகளின் மத்தியிலே சாந்தமுடன் புன்னகை பூத்த யுகபுருஷன் கிரிஸ்ணர் துக்கசாகரத்தில் மூழ்கிய அர்ச்சுணனுக்கு பின்வருமாறு உபதேசித்தார் !!
கீதை 2:11 இறைதூதர் கிரிஸ்ணர் கூறுகிறார் : பட்டறிவால் விளைந்த வார்த்தைகளையே பேசுகிறாய் அர்ச்சுணா ! நன்று ! ஆனாலும் துக்கப்பட தகுதியில்லாதைவகளுக்கு நீ அஞ்சலி செலுத்துகிறாய் !யார் ஞானம் விளைந்தவர்களோ அவர்கள் உயிரோடு இருக்கிறவர்களுக்கோ அல்லது மரித்தவர்களுக்கோ வெதும்புவதில்லை !!
கீதை 2:12 படைப்பின் துவக்கத்திலிருந்து நான் இல்லாத நேரம் இல்லை அல்லது நீயோ ஏன் இங்குள்ளோர் அனைவரும் இல்லாது போகும் நேரம் இனிமேலும் இல்லை !!
கீதை 2:13 உடலினுள் உறையும் ஆத்துமா இந்த உடம்பில் குழந்தை ; வாலிபம் மற்றும் வயோதிகத்துள் கடந்து போவதுபோல இறப்பிற்குப்பின்னும் ஆத்துமசரீரமாய் உடம்பையும் கடந்துபோகிறது ! உணர்ந்தோன் உடம்பு கடந்து போவதற்காய் தடுமாற்றம் அடைவதில்லை !!
கீதை 2:14 நிலைத்த தன்மை அற்ற ``இன்பம் மற்றும் துன்பம்`` ஆகியவற்றின் தற்காலிக இருப்பும் அல்லது சின்னாளில் இல்லாதுபோவதும் குளிர்காலமும் கோடைகாலமும் மாறிமாறி வருவது போன்றதே ! பாரத குலத்தோன்றலே ! இவைகள் புலண்களின் நுகர்சியிலிருந்து தோன்றுபவையே ! அவைகளால் உண்டாகும் பாதிப்புகளை பொருட்படுத்தாத மனநிலையை கற்றுகொள்ளவேண்டும் !!
கீதை 2:15 மனிதர்களில் சிறந்தவனே ! யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கபடாத மனநிலை உடையவனாய் இரண்டிலும் சமநிலை எய்தியவனோ அவனே விடுதலை பெற தகுதியுடையவன் !!
கீதை 2:16 உண்மையை உணர்ந்தவர்கள் நிலையற்ற பெளதீக பொருட்களுக்கு நீடிப்பும் : நிலைத்த ஆத்துமாவுக்கு முடிவும் இல்லையென்றே தீர்க்கமாய் உரைக்கிறார்கள் ! உலகம் சார்ந்தவைகள் மற்றும் உள்ளார்ந்தவைகள் இரண்டின் இயல்புகளை ஆராய்ந்தே இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள் !!
கீதை 2:17 உடல் முழுவதும் நிறைந்திருக்கும் ``ஆத்துமா அழிவற்றது `` என அறியக்கடவாய் ! அழிவற்ற ஆத்துமாவை இப்போரினால் கொல்லமுடியாது !!
கீதை 2:18 கண்டறிந்து கைப்பற்ற இயலாத உள்ளார்ந்த மனித ஆத்துமா (ஜீவாத்துமா) அழிவற்றது ! அதன் பெளதீக உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும் ! ஆகவே போரிடுவாயாக !!
கீதை 2:19 தன்னைத்தானே அழித்துக்கொள்ளவோ அல்லது அடுத்த ஆத்துமவை அழிக்கவோ ஜீவாத்துமாவாலும் முடியாது ! ஆகவே யார் பிறரை கொல்லுவோம் அல்லது பிறரால் கொல்லப்படுவோம் என நினைக்கிறார்களோ அவர்கள் அறிவீணர்களே !!
கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!
கீதை 2:21 பார்த்தா ! ஆத்துமா அழிவற்றது ; நித்தியமானது :பிறப்புஇறப்பை கடந்தது ; கட்டிவைக்கபட முடியாதது என்பதை உணர்ந்த ஒருவன் ``கொல்லுவது கொல்லப்படுவது`` என்பதை கடந்துவிடுகிறான் !!
கீதை 2:22 ஒரு மனிதன் பழைய ஆடைகளை களைந்து புதிய ஆடைகளை அணிந்துகொள்ளுவது போல புதியபுதிய உடல்களாக பரிணமித்துகொள்ளுகிறது ; தளர்ந்து பயனற்று போன உடலை விட்டுவிடுகிறது !!
கீதை 2:23 ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டமுடியாது ! தீயினால் எரிக்கமுடியாது ; தண்ணீராலும் பதப்படுத்தமுடியாது அல்லது காற்றினாலும் பறக்கடிக்க முடியாது !!
கீதை 2:24 அனைத்துமாகிய பரமாத்துமாவோ பிரித்துபார்க்க முடியாதது ; சாம்பலாக்கவோ கரைக்கவோமுடியாதது ; உலர்ந்தும் போகாதது !பரமாத்துமா முடிவே இல்லாதது ; எங்கும் நிறைந்தது ; மாற்றமடையாதது ; அகன்றுபோகாதது !!
கீதை 2:25 ஆத்துமா கண்ணால் காணமுடியாதது ; ஒடுக்கவோ உற்பத்தி செய்யவோ முடியாதது ! இவற்றை அறிந்தபின்பு லெளகீக உடலுக்காய் ஏன் துக்கபடவேண்டும் ?
கீதை 2:26 போரில் வல்லவனே ! ஆத்துமா பிறக்கிறது அழிகிறது என நம்பிக்கொண்டிருந்ததாலேயே உனக்கு இந்த துக்கம் உண்டாகிறது !!
கீதை 2:27 இப்பிறவியின் உடல் நிச்சயம் அழிந்தே தீீரும் ! ஆத்துமாக்கள் இப்பிறவிக்கு பிறகு அடுத்த பிறவியில் ல் பிரவேசிக்கின்றன ! ஆகவே உன் மேல் வந்த கடமைகளை நிறைவேற்ற துக்கம் கொள்ளாதே !!
கீதை 2:28 எல்லா படைப்பிணங்களும் படைப்பவரால் வெளிப்படுத்தபடாதபோது இல்லாதவைகளைப்போல இருந்தவைகளே ! தற்காலிகமாக வெளிப்படுத்தபட்டு இருப்பவைகளைப்போல செயல்படுபவைகளே ! முடிவில் அழிவடைந்து இல்லாதவைகளைப்போல ஆபவைகளே ! ஆகவே எவைகளுக்காய் துக்கபட என்ன இருக்கிறது ?
கீதை 2:29 சிலர் மட்டுமே அற்புதமான ஆத்துமாவை அறிந்து கொள்ளுகிறார்கள் ! சிலர் அற்புதமான ஆத்துமாவை பற்றி பேசிக்கொண்டு மட்டுமே உள்ளனர் ! சிலரோ கேள்விப்பட்டு மட்டுமே உள்ளனர் ! ஆனால் பலரோ எதுவுமே அறியாதவராகவே உள்ளனர் !!
கீதை 2:30 அழியும் உடலில் உறையும் ஆத்துமா அழிவற்றது ! ஆகவே அர்ச்சுணா ! எவருக்காகவும் நீ துக்கபட வேண்டிய அவசியமில்லை !!
தர்மத்திற்கான யுத்த களம் மறுமையில் மேன்மைக்கான கதவு !!
கீதை 2:31 சத்திரியனுக்கு நியமிக்க பட்ட தனித்த கடமை என்ற அளவில் தர்மத்திற்காக போரிடுவதை விட மேலான வேறு பொறுப்புகள் ஏதுமில்லை ! ஆகவே நீ தயங்குவதற்கு முகாந்தரமில்லை !!
கீதை 2:32 அப்படிப்பட்ட யுத்த களம் வாய்க்குமென்றால் அதற்காக ஆத்மதிருப்தி கொள்ளும் சத்திரியர்கள் இருப்பார்கள் பார்த்தா ! ஏனெனில் மறுமையில் மேன்மைக்கான கதவு திறக்கப்பட்டதை அறிந்து உவகை அடைவார்கள் !!
கீதை 2:33 தர்மத்திற்காக போரிடுவதை தட்டிகளித்தால் கடமை தவறிய குற்றத்திற்கு ஆளாவதோடு போர்வீரன் என்ற கீர்த்தியையும் இழப்பாய் !!
கீதை 2:34 உலகோர் உன் இயலாமையை இகழ்வர் ! அத்தகைய அவப்பெயரை விட மதிப்புள்ளவருக்கு மரணமே மேலானது !!
கீதை 2:35 உனது பேரையும் புகழையும் கொண்டாடும் யுத்த வீரர்களின் தலைவர்கள் நீ பயந்து யுத்த களத்தை விட்டு ஓடியதாகவே நினைப்பர் ! அதனால் உன்னை கோழை என்பதாக முடிவு செய்வர் !!
கீதை 2:36 உனது எதிரிகள் வாய்க்கு வந்த படி வர்ணித்து சொல்லத்தகாத வார்த்தைகளால் இகழ்வர்! அதனை காட்டிலும் வேறு என்ன மனநோவு வரும் ?
கீதை 2:37 குந்தியின் மகனே ! ஒன்று தர்மத்திற்காக யுத்த களத்தில் கொல்லப்பட்டால் மறுமையில் மேன்மையை அடைவாய் ! அல்லது போரில் வென்று உலக அரச போகத்தையும் அனுபவிப்பாய் ! ஆகவே மனதிடத்தோடு எழுந்து நின்று போரிடுவாயாக !!
கீதை 2:38 இன்பதுன்பம் ; லாப நட்டம ; வெற்றி தோல்வி என்ற இருமைகளை கடந்து செயலுக்காக செயல் புரியும் மன நிலையில் போருக்காக போர் செய்க ! அப்படி செயல்பட்டால் பாவம் உன்னை பற்றாது !!
மனச்சம நிலையில் செயலாற்றுவதே யோகம் !!
கீதை
2:39 இதுவரை பவ்தீக பொருட்களின் அடிப்படையில் இந்த மெய் அறிவை உனக்கு
உபதேசித்தேன் ! இப்போதோ பலன் விளைவில் பற்று கடந்த வேள்வியைப்பற்றி உனக்கு
உபதேசிக்கிறேன் ! பிரதாவின் மகனே ! அந்த அறிவில் நிலைத்து நின்று
செயல்பட்டால் கர்மங்களால் உண்டாகும் தளைகளை தகர்த்து சுதந்திரமடைவாய் !!
கீதை
2:40 இந்த வேள்வியில் இழப்போ அல்லது குறைச்சலோ ஏற்படாது !மாறாக இவ்வழியில்
சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஒருவன் அதி பயங்கரமான பயத்தையும் கடந்து
விடுவான் !!
கீதை 2:41 இவ்வழியில்
நடப்போர் தங்கள் இலக்கில் தெளிவடைந்து ஒரே நோக்கத்திற்காய் செயல்படுவர் !
குருவம்சத்தில் சிறந்தவனே ! இலக்கில் தெளிவில்லாதவர்களின் அறிவுத்திறனோ பல
பல வாய்க்கால்களில் வடிந்து போகும் !!
கீதை
2:42 ஆழ்ந்த அறிவற்றவர்கள் லோகாதாய பக்தி மார்க்கங்களின் ஜால வார்த்தைகளை
வேதமென நம்பி அதன் பால் கவரப்படுகிரார்கள் ! அது வசதியையும் வாய்ப்பையும்
அதிகாரத்தையும் ஆட்சியையும் அடைவதற்கு வாக்களித்து அதன் மூலம் உயர்ந்த
லோகத்தையும் அடைந்துவிடலாம் என நம்ப வைக்கிறது !
கீதை
2:43 ஆடம்பரமான வாழ்வையும் புலனின்பங்களை அனுபவிப்பதையுமே விரும்பி இதை
விட மேலான சம்பத்து வேறு என்ன வேண்டும் என கூறிக்கொள்கின்றனர் !!
கீதை
2:44 புலனின்பங்களையும் டாம்பீக வாழ்வையும் அதனால் சுயபெருமையும்
அடைந்தவர்கள் அந்த வழியில் மனம் லயித்ததனால் உன்னதமான் கடவுளுக்கு
உள்ளார்ந்த பக்தி -இறைஅன்பு புலப்படாமலேயே போகின்றனர் !!
கீதை
2:45 தாமச, ரஜோ மற்றும் சத்வம் எனும் மூவகை குணங்களிலிருந்து பிறக்கும்
அண்ணமயம், மனோமயம் ,மற்றும் விஞ்ஞானமயம் என்ற மூவகை கோஷங்களின் வெற்றிகரமான
செயல்பாடுகளுக்கு அந்த லோகாயாத வேதங்கள் வழிகாட்டுகின்றன !
அர்ச்சுனா ! இந்த மூன்றையும் கடந்து மெய்ஞானமய கோஷத்தில் நுழைந்தால் எல்லாவகையான் இருமைகளின் தாக்கத்தை கடந்து ; வெற்றி தோல்வி வேட்கையை களைந்து பரிபூரணத்தில் தன்னில்தானே மகிழ்ந்திருப்பாய் !!
அர்ச்சுனா ! இந்த மூன்றையும் கடந்து மெய்ஞானமய கோஷத்தில் நுழைந்தால் எல்லாவகையான் இருமைகளின் தாக்கத்தை கடந்து ; வெற்றி தோல்வி வேட்கையை களைந்து பரிபூரணத்தில் தன்னில்தானே மகிழ்ந்திருப்பாய் !!
கீதை
2:46 பெரிய ஏரியால் கிடைக்கும் அனுகூலங்கள் எல்லாம் ஒரு கிணற்றிலிருந்தும்
அடையப்பெறும் ! அதுபோல லோகாயாத வேதங்கள் அனைத்தினதும் அனுகூலங்கள் எல்லாம்
அதனை கடந்த மெய்ஞானத்தை அடைந்தவனுக்கும் உண்டாகும் !!
கீதை
2 :47 உனக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்வதற்கு மட்டுமே உரிமை உண்டு ;
ஆனால் செயல்களின் பலன்களின் மேல் உனக்கு எந்த பொறுப்புகளும் இல்லை !
எப்போதும் உனது செயல்களின் விளைவுகளுக்கு நீ காரணன் என்று எண்ணாதே ;
அதற்காக கடமைகளை தட்டிகழிக்கவும் உன்னை ஆட்பாடுத்தாதே !!
கீதை
2 :48 வெற்றி தோல்வியின் மீது உள்ள பற்றுதல்கள் ஒழித்து விட்டு மன
சமநிலையோடு உனது கடமைகளை செய்து வருவாயாக ! அர்ச்சுனா ! அந்த சம நிலையே
யோகம் என்பதை அறிக !!
கீதை 2 :49
தனஞ்சய ! லோகாயாத செயல்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து :கடவுளையே
சரனாகதியடைத்து அவருக்கு பக்தி தொண்டாக கருதி உன்மேல் வந்த கடமைகளை செய்து
வருவாயாக !
அவ்வாறில்லாமல் பலன்களை அனுபவிக்கும் நோக்கில் செயல்படுவோர் துன்பத்தையே அடைவர் !!
அவ்வாறில்லாமல் பலன்களை அனுபவிக்கும் நோக்கில் செயல்படுவோர் துன்பத்தையே அடைவர் !!
கீதை 2 :50
யார் ஞானம் முதிர்ந்த பக்தி தொண்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்களோ அவர்கள்
இவ்வுலக வாழ்விலேயே நன்மையான செயல்கள் அல்லது தீமையான செயல்கள் என்ற
பேதத்தை கடந்து சுதந்தரமடைவர் ! ஆகவே அத்தகைய யோகத்தில் நிலைக்க
பெருமுயற்சி செய்க ! அதுவே செயல்களில் சிறந்த செயலாகும் !!
கீதை 2:51 இவ்வாறான மெய்ஞான பக்தியின் மூலம் உன்னதமான கடவுளுக்கே
தொண்டாற்றி மகரிஷிகளும் நல்லடியார்களும் உலகியல் வாழ்வில் கர்மங்களின்
தளைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்கிறார்கள் ! இப்பாதையில் நடப்பதால்
எல்லாவகையான பிரவிப்பினியை வெல்லும் தகுதியடைந்து நித்திய ஜீவனுக்கு
ஏதுவாகிறார்கள் !!
கீதை 2:52 மாயைகள் என்னும் அடர்ந்த வனத்தை உன் அறிவுத்திறன் கடந்து விட்டால் ; உலகம் அறிந்ததைதையும் இனிமேல் அறியப்போவதையும் விஞ்சிய நிலையடைவாய் !!
கீதை 2:53 எப்போது உன் மனம் லோகாயாத வேதங்களின் ஜால வார்த்தைகளால் மயங்காத நிலையடைகிறதோ ; தன்னை உணர்ந்து பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதில் நிலைத்து நின்றுகொண்டே இருக்கிறதோ அப்பொழுதே நீ தெய்வீக உணர்வில் -மெய்ஞானமய கோஷத்தில் திளைக்க முடியும் !!
கீதை 2:52 மாயைகள் என்னும் அடர்ந்த வனத்தை உன் அறிவுத்திறன் கடந்து விட்டால் ; உலகம் அறிந்ததைதையும் இனிமேல் அறியப்போவதையும் விஞ்சிய நிலையடைவாய் !!
கீதை 2:53 எப்போது உன் மனம் லோகாயாத வேதங்களின் ஜால வார்த்தைகளால் மயங்காத நிலையடைகிறதோ ; தன்னை உணர்ந்து பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைவதில் நிலைத்து நின்றுகொண்டே இருக்கிறதோ அப்பொழுதே நீ தெய்வீக உணர்வில் -மெய்ஞானமய கோஷத்தில் திளைக்க முடியும் !!
கீதை 2:54 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? அவன் பேச்சும் பாணியும் எப்படி இருக்கும் ? அவன் இருப்பும் அசைவும் எப்படி இருக்கும் ?
ஆத்தும விடுதலை !!
கீதை 2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும் புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!
கீதை 2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும் பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!
கீதை 2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில் பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!
கீதை 2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!
கீதை 2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் துலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபரிபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்துமபரிபூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர ஆத்துமா ; கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !!
கீதை 2:55 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : பார்த்தா ! மனதை மயக்கும் மாயைகளினால் எழும் புலனின்பம் தொடர்பான எல்லா இச்சைகளையும் கைவிடுகிற பயிற்சியால் மனம் தூய்மையடைந்து கொண்டே இருக்கிறவன் தன் ஆத்துமாவில் பூரணமெய்தி தன்னில்தானே திருப்தியடைவான் ! அவனே உன்னதமான ஞானமய கோஷத்தை எய்தியவன் !!
கீதை 2:56 உலகில் மூவகை கோஷங்களின் முரண்பாடுகளால் விளைகின்ற துயரங்களின் மத்தியிலும் பாதிப்படையாத மன நிலையும் ; மகிழ்ச்சியில் துள்ளாத மன நிலையும் ; எதன் மீதும் பற்று ,பயம் ,கோபம் அற்ற மன நிலையும் எய்தியவனே நிலைத்த மனதை அடைந்த மகரிஷி எனப்படுவான் !!
கீதை 2:57 இந்த லவ்கீக உலகில் நன்மையோ தீமையோ எது நேரினும் பாதிப்படையாதவன் எவனோ ; வெற்றியில் பெருமைபாராட்டாதவனும் தோல்வியில் வெம்பி வெதும்பாதவனும் எவனோ அவனே பூரண ஞானத்தில் நிலைத்தவனாவான் !!
கீதை 2:58 ஆமை தன் அவயங்களை ஓட்டுக்குள் இழுத்து கொள்வதுபோல புலன்களை ஈர்க்கும் புற உலகினின்று புலன்களை விடுவித்து கொள்ளும் பக்குவத்தை எய்தியவன் எவனோ ; அவனே பூரண ஞானத்தை எய்தியவன் !!
கீதை 2:59 புலன் இச்சை புலன்களின் இயல்பாய் இருந்தாலும் ; உடலில் துலங்கும் ஆத்துமா புலனின்ப மயக்கத்திலிருந்து தன்னை விடுவிக்கும் இடையறாத பயிற்சியால் ஆத்துமபரிபூரணம் என்ற தனது உன்னத நிலையை உணர்ந்து விழிப்படையும் ! ஆத்துமபரிபூரணம் என்ற உன்னத சுவையை உணரஉணர ஆத்துமா ; கீழான புலனின்ப சுவையிலிருந்து விடுதலை அடையும் !!
கீதை 2:60 அர்ச்சுனா ! புலன்கள் வலிமையும் சக்தியும் மிக்கவை ! தன்னை உணர்கிற பக்குவத்துடன் புலன்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளவரைக்கூட புலன்கள் மேற்கொண்டு தங்கள் பின்னே இழுத்து செல்கின்றன !!
கீதை 2:61 யார் தன் புலன்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ; அவைகளை முழுக்கட்டுப்பாட்டில் வைத்து ; உள்ளுணர்வை கடவுளின் மீதே நிலைக்க செய்கிறானோ ; அவனே நிலைத்த அறிவுடையோன் எனப்படுவான் !!
கீதை 2:62 புலன்களை ஈர்க்கும் புறஉலக பொருட்களின் மீது ஆர்வம் கொள்வதால் ஒருவன் அவைகளின் மீது ஈடுபாட்டை உடையவனாகிறான் ! அந்த ஈடுபாட்டால் இச்சை உண்டாகிறது ; அந்த இச்சை மூர்க்கத்தை வளர்க்கிறது !!
கீதை 2:63 அந்த மூர்க்கம் மனக்குழப்பத்தை உண்டாக்கி புத்தி பேதலிப்பில் போய் முடியும் ! புத்தி பேதலிப்பால் ஒருவன் அறிவுத்திறன் குறைந்து மழுங்கி மீண்டும் உலகமாயை என்னும் குட்டைக்குள் விழுந்து சகதியில் உழல்வான் !!
கீதை 2:64 ஆனால் யார் எல்லா வகை புலனிச்சைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு ; விருப்புவெறுப்புகளை கடந்து ;ஆத்தும விடுதலைக்காக புலன்களை நெறிப்படுத்துகிறானோ அவனே உன்னதமான கடவுளின் கிருபைக்கு முழுப்பாத்திரனாவான் !!
கீதை 2:65 அவ்வாறு ஆத்துமதிருப்தியடைந்தவனை உலகியலின் மூவகை இயல்புகளால் உண்டாகும் துன்பங்கள் தொடர்ந்து பீடிக்க இயலாது ! ஆத்தும திருப்தியால் ஒருவன் விரைவில் பூரனஞானம் சித்திக்க பெறுவான் !!
தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதை !!
கீதை
2:66 யார் உன்னதமான கடவுளோடு தன்னை தொடர்புபடுத்தி கொள்ளாதவனோ அவன்
ஒருபோதும் உன்னதமான ஞானத்தையோ அல்லது நிலைத்த மனதையோ அடைவதில்லை !
இவைகளில்லாமல் ஒருவனுக்கு சாந்தி உண்டாவதில்லை ! சாந்தியில்லாமல் எந்த
சந்தோசமும் நிலைப்பதில்லை !!
கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!
கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!
கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!
கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!
கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!
கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!
கீதை 2:67 வலிய காற்றில் படகானாது இழுத்து செல்லப்படுவது போல அலைபாய்கிற புலன்களில் ஒன்றிலாவது ஒருவனின் மனம் ஒத்திசைந்தால் போதும் அவனது அறிவுத்திறனை அது சிதறடித்து விடும் !!
கீதை 2:68 ஆகவே வலிமை உள்ளோனே ! யார் புலன்களை அவற்றின் நுகர்வுப்பொருட்களின் ஈர்ப்பினின்று விடுவித்து கொள்ள வல்லவனோ அவனே நிலைத்த மனதுடையவன் !!
கீதை 2:69 அத்தகைய சுய கட்டுப்பாடு உள்ளவன் தூங்காமல் தூங்கி விழித்திருக்கும் மெய்ஞானியாவான் ! அவன் உலகமே விழித்து பரபரப்பாய் இயங்கும் போதும் ஓய்ந்திருப்பவனைப்போலவும் ; உலகம் ஓய்ந்திருக்கும் போதும் விழித்திருப்பவனைப்போலவும் இருப்பான் !!
கீதை 2:70 ஆறுகள் எவ்வளவு தண்ணீரையும் கொண்டு வந்து சமுத்திரத்தில் கொட்டினாலும் அதனை கரைத்து சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போல ; எவ்வளவு வந்து நிறைந்தாலும் நிறையாததைப்போலவே இருப்பதைப்போல மனதுள் வந்து மயக்கும் வண்ணவண்ண இச்சைகளால் --விதவித மாயைகளால் பாதிப்படையாமல் தன்னில்தானே நிலைத்திருப்பவன் எவனோ அவனே சாந்தி எய்துவான் ! யார் இச்சைகளை பூர்த்தி செய்ய விளைகிறானோ அவன் சாந்தி எய்துவதில்லை !!
கீதை 2:71 எல்லா வகையான புலனின்ப நாட்டங்களை வென்றவனும் ; ஆசைத்தளைகளை அறுத்து சுதந்திரத்தில் திளைப்பவனும் ; உடமைகளைக்குரித்த தற்பெருமையை அறவே விட்டவனும் ; தான் என்ற ஆணவத்தை துறந்தவனும் எவனோ அவனே தெய்வீக சமாதாணத்தை எட்டியவன் !!
கீதை 2:72 இதுவே ஆன்மீக வாழ்வு மற்றும் தெய்வீகத்தன்மை பெறுவதற்கான பாதையாகும் ! இந்நிலையை அடைந்தவன் ஒருபோதும் தடுமாறுவதில்லை ! தன் வாழ்வின் கடைசி மணித்துளியில் கூட ஒருவன் இந்நிலையை அடைந்தால் அவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது திண்ணம் !!