Wednesday, July 18, 2012

கீதா உபதேசத்திற்கான காரணிகள்




துவாபர யுகத்தின் முடிவு நெருங்கிவிட்டது

ஒவ்வொரு யுகத்திற்கும் அதற்கென்று தகவமைக்கப்பட்ட மனித உடல் மற்றும் அதன் உள் கூறுகள் உள்ளன . துவாபர யுகத்துக்கென்று பிறக்க வைக்கப்பட அனைத்து ஆத்மாக்களும் ; அதே உடலுடன் கலியுகத்திற்குள் கடந்து செல்ல முடியாது

ஆத்மாக்கள் எதுவும் அழிவதில்லை ; உடல்தான் அழிக்கப்படுகிறதே தவிர புதிய உடலுடன் பூமியில் மறுபடி பிறப்படைக்கிறார்கள்

ஒரு சிலர் மட்டுமே யுக மாறுதலுக்குள் கடந்து செல்லும் தகவமைப்போடு பிறந்தவர்களாக இருந்திருப்பார்கள்

முதல் மனித சமூகமான கிருத யுகமும் ; அதன் லெமூரியா கண்டமும் ; 60 அடி உயரமான மனிதர்களும் ; டைனோசர் போன்ற உயரமான மிருகங்களும் கிருத யுகத்திற்கு பிறகு பூமியில் இல்லை

பூமி முழுதும் ஜலப்பிரளயத்தால் அழிக்கபட்டு ஒரு கும்பத்தில் அகத்தியரை கொண்டு சில உயிர்கள் காப்பாற்றப்பட்டன என தமிழக கும்பகோண கும்பமேழா கதையிலும் ; வட இந்தியாவில் சத்தியவரதன் கதையிலும் ஆப்ரகாமிய வேதங்களில் நோவா @ நூவ் நபி பேழையில் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக வரலாறு சொல்லப்பட்டது

முதலாம் தமிழ்சங்கத்தில் ஆதம்நபி என்ற சிவனும் இறையனார் அகப்பொருள் என்ற கவிதை நூலை அரங்கேற்றியதும் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம்

தமிழகம் ; இமயமலை ; மக்கா அருகிலுள்ள அரபாத் புல்வெளி என பல்வேறு இடங்களில் சிவனார் வாழ்ந்து மனித குலத்தை ஆங்காங்கே உற்பத்தி செய்கதாக அறிகிறோம்

அதன்பின்னர் காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூரில் ஆதியோகியாக நீண்ட நெடிய தவம் இயற்றி அழிவுக்கேதுவான மனித சரீரத்தை மீண்டும் அழிவில்லாத ஒளி சரீரமாக மாற்றினார் என்பதை உலகின் முதல் வைரவர் என கோவிலில் ஸ்தலவரலாறு உள்ளது . அருகில் வைரவன்பட்டியில் வைரவனார் கோவிலும் ; வளரொளி நாதர் என்ற ஆத்ம லிங்கமும் ஆவணங்களாகும்

அப்படி மீண்டும் தேவர் என்ற தன்மையாகி சிவனார் பரலோகம் ஏகி இப்போது ருத்திர பதவி அதாவது ஆர்க் ஏஞ்சல் மிகாயேல் ஆக உள்ளார்

இரண்டாம் யுகம் ; தமிழ்சங்கம் பூம்புகார் ; ஆதிகடவூர் உள்ளிட்ட கபாடபுரம் ஆகும் . இங்கு அரசாண்ட சோழர்கள் ராமரின் அதே குலத்தை சேர்ந்தவர்கள்

மனுநீதி சோழனின் குறிப்பில் அவன் ரகுவம்ஸத்தில் வந்தவன் என்ற குறிப்பு உண்டு . எப்படி சிவனார் பூமியில் மூன்று இடங்களில் மனித குலத்தை கிருத யுகத்தில் தோற்றுவித்தாரோ ; அதுபோல திரேதா யுகம் என்ற இரண்டாம் யுகத்தின் வம்சம் ரகுவம்ஸம் ஆகும்

முதலாம் யுக முடிவில் ஜலப்பிரளயத்தின் மூலமாக பேரழிவு சம்பவித்தே இரண்டாம் யுகம் துவங்கியது .

ஆனால் அந்த பேரழிவினைப்பார்த்து இறைவனே மனஸ்தாபத்திற்குள்ளானார் என தவ்ராத்ல் இறைவார்த்தை வந்துள்ளது


ஆதியாகமம் 9 : 9. நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,

10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்.

11. இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.


இப்படி யுகமாறுதலின் போது இனிமேல் பிரளயம் இல்லையே தவிர ; அதற்கொப்ப சிறு சிறு நிகழ்வுகள் ; மனித யுத்தகங்களால் சாவுக்கு பிறகே யுக மாறுதல் சம்பவிக்கிறது

இரண்டாம் திரேதா யுகத்தில் ராமருக்கும் லங்கேஸ்வரனுக்கும் யுத்தத்தில் பேரழிவு உண்டானது

மூன்றாம் துவாபர யுகத்தில் மகாபாரத யுத்தத்தில் உலகம் முழுவதிலும் பங்கெடுத்து பலர் மாண்டனர்

அந்த யுத்தத்தை முன்னெடுக்க வைக்க நரநாராயனர்களான யுகபுருஷன் ஸ்ரீகிறிஷ்ணரும் அர்ச்சுனரும் அவதரித்து இருந்தனர் . கூடவே உயிர்களை அழிக்கும் காளியின் அம்சமான திரெவ்பதியும் அவதரித்து இருந்தனர் .

அபிராமி அந்தாதி
77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.


ருத்ரணனின் இணைவியான கொற்றவை ; சுடுகாடு காளி என்றும் சொல்வார்கள் ; அழிவின் தேவர் இவர் . யுக மாறுதலின் போது இவரின் செயல்பாடும் இருக்கும் .

இப்படி மூன்றாம் யுக முடிவிற்காக உலகிற்க்கு வந்தவர்களால் மகாபாரத யுத்தம் முன்னெடுக்கப்பட்டது .

ஆனாலும் அது ஏதோ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்குமான பங்காளி சண்டை என்பதுபோல மேற்போக்காக இருந்தாலும் ; இந்த யுத்தத்தில் உலகம் முழுவதும் இருந்த அரசர்கள் தங்கள் தங்கள் சேனையுடன் திரளாக இரண்டு அணிகளிலும் எதற்காக திரண்டார்கள் ?

இதுவே இறை சித்தம் என்பது ; யுக அழிவு என்பது

இப்போதும் கூட உலகம் நான்காம் கலியுகத்திலிருந்து சத்திய யுகத்திற்குள்ளாக பிரவேசிக்கப்போகிறது . இதற்கான ஒரு பேரழிவாகவே கொரோனா விஷ ஜுரம் பாதித்து வருகிறது .

ஆனாலும் அருளாளர்கள் பலர் பிறந்து இடையறாது மன்றாடி பிரார்தித்து வருவதால் அழிவு குறைவாகவும் ; வியாதி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தேறியோர் ; தொற்று பாதிப்பு வெளியே தெரியாமலேயே தேறியோர் என ஒரு புதிய பிளாஸ்மா ரத்தத்தில் ஊறி வருகிறது .

இது மனித சரீரத்தை சத்திய யுகத்திற்குள் கொண்டு செல்வதற்கே தகுதி உண்டாக்குகிறது

ஆனாலும் சிலர் அழிவுக்குள்ளாகின்றனர் . இதன் தாத்பர்யம் இறைவனே அறிவார் . ஆனாலும் மனதிற்குள்ளாக இறைவனை நோக்கிய பிரார்த்தனை உள்ளோரே ; நற்கருமங்கள் புரிவோரே புண்ணியங்கள் உள்ளோரே தப்பித்தும் வருகின்றனர்

அப்படி துவாபர யுக முடிவுக்கான யுத்தமாக குருஷேத்திரத்தில் உலகின் 20 கோடி நபர்கள் அழிவுக்குள்ளாகினார் என்கிறார்கள் .

ந்த யுத்தத்திற்காக இரு தரப்பாரும் கூடியபிறகு மாமுனிவர் வியாசர் கண்ணில்லாத அரசன் திருதராஸ்ட்டரருக்கு போர்க்கள சம்பவங்களை அப்படியே சினிமா பார்ப்பதுபோல போல பார்த்து அறிவிக்க ஞான திருஸ்ட்டியை அவரது மந்திரி ஸஞ்சயருக்கு அருளினார் . அதன் வாயிலாக போர்க்கள சம்பவங்களை உடனுக்குடனேயே லைவ் ஆக பார்த்தார்கள் .

கீதை துவக்க நிகழ்வுகள்

கீதை 1 : 1 திருதராஷ்ட்ரர் கேட்டார் ; ஸஞ்சயா ! தர்மபூமியான குருஷேத்ரத்தில் ஒருங்கே கூடி யுத்தம் செய்கிறவ்ர்களான என்னவர்களும் பாண்டவர்களும் என்ன செய்கிறார்கள் ?;

கீதை 1 : 2 ஸஞ்சயன் கூறினார் : ராஜா துரியோதனன் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்த பாண்டவர் படையை பார்தததும் ஆச்சார்யார் துரோணரை அணுகி இந்த வார்த்தையை கூறலானார்

கீதை 1 : 3 ஆச்சார்யரே ! உங்களது புத்திசாலியான சீடனும் துருபதனின் குமாரனுமான திருஸ்ட்டதும்ணனால் அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவர்களின் சேனையை பாருங்கள்

கீதை 1 : 4 - 6 அந்தப்படையில் அதிரதர்கள் எனப்பட்ட பெரிய வில்லாளிகள் ; யுத்தத்தில் பீமனுக்கும் அர்ச்சுணனுக்கும் ;இணையான வீரர்கள் ; சாத்யகி , விராடன் , மகாராஜா துருபதன் , திருஷ்ட்டகேது , செகீதான் , காசிராஜன் , புருஜீத் , குந்திபோஜன் , சைப்யன் , யூதாமன்யு , உத்தமெளஜா , சுபத்ரையின் குமாரன் அபிமன்யு , திரேவ்பதியின் குமாரர்கள் ஐவர் இருக்கிறார்கள் .

கீதை 1 : 7 அந்தணர்களில் சிறந்தவரே ! அவ்வாறே நமது அணியிலும் யாரெல்லாம் பிரதான வீரர்களோ ; அதிரதர்களோ அவர்களை தேர்ந்து கொள்ளுங்கள் ; என்னுடைய படைத்தலைவர்களான அவர்களைப்பற்றி உங்களின் கவணத்திற்கு கொண்டுவருகிறேன் .

கீதை 1 : 8 யுத்தத்தில் தேர்ந்தவரான தாங்களும் , பாட்டனார் பீஷ்மரும் , கர்ணனும் , கிருபாச்சார்யாரும் , அசுவாத்தமானும் , விகர்ணனும் , பூரிசிரவஸ்ஸும்

கீதை 1 : 9 மேலும் உயிராசையை எனக்காக விட்டவர்களான வேறு பல சூரவீரர்களும் தங்களது ஆயுதங்களுடன் தயாராகவே நிற்கிறார்கள்

கீதை 1 : 10 பாட்டனார் பீஷ்மரால் நடத்தப்படும் நமது படை எந்த வகையிலும் எதிரிகளால் வெல்லப்பட முடியாதது . ஆனால் பீமானால் பாதுகாக்கப்படும் அந்தப்படை நம்மால் எளிதாக வெல்லப்பட கூடியதே .

கெளரவர் படையின் சேனாதிபதியான பீஷ்மர் அணிவகுத்த சேனையைப்பற்றி ; தன்னால் அவரிடம் பெருமை பேச முடியாது என்பதாலும் ; ராஜா என்கிற முறையில் தனது மேலாண்மை இருப்பதாலும் ; துரியோதனன் தனது கருத்தை துரோணரிடம் போய் தெரிவிக்கிறான் . இது பீஷ்மரிடம் சேர்க்கப்படும் என்ற வகையில்

தனது படையினர் பீஷ்மர் நடத்துதலில் இருப்பதால் ; தங்களை வெல்வது கடினம் என சுய நம்பிக்கை கொள்கிறான் ; ஆனால் எதிராளிகள் யுகபுருஷன் ஸ்ரீகிறிஷ்ணரின் நடுத்துதலில் இருப்பார்கள் என ஆன்மீகரீதியாக அவனால் கணக்கீடு செய்யமுடியவில்லை

அதனால் பாண்டவ சேனைக்கு பீமனே பெரும் பலம் என நம்புகிறான்

எதிராளிகளை பற்றிய சரியான கணிப்பு இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம் .

ஸ்ரீகிறிஷ்ணர் ஒன்று எனது படையினர் அனைவரும் வேண்டுமா அல்லது ஆயுதம் ஏந்தாத தான் வேண்டுமா எனக்கேட்டபோது அர்ச்சுணன் எங்கே படை வீரர்களை கேட்டுவிடுவானோ என பயந்து ; அவன் ஸ்ரீகிறிஷ்ணர் வேண்டும் என சரியான தேர்வு செய்தபோதும் கூட ஆகா அதிர்ஷ்டம் பெரும் படை கிடைத்தது என மனித பலத்தை நம்பியவன் துரியோதனன்

மனித பலம் ; மனித முயற்சி இறைவனின் சக்திக்கு முன்பு தூசு .

அதே தவறை எதிரணியில் தேரோட்டியாகவே நின்றாலும் யுகபுருஷன் நிற்கிறார் ; நிலைமைகளை அவ்வப்போது திசை திருப்பிவிடக் கூடியவர் என்ற உண்மை துரியோதனனுக்கு உணரவே இல்லை .

ஆனால் போர்க்கள ரீதியான ஒரு பின்னடைவை சரி செய்ய முயல்கிறான்

அது ஏதென்றால் சிகண்டி ஆணாக மாறியிருந்தாலும் ; பெண்ணாக பிறந்தவள் என்பதாலும் ; பீஷ்மரை கொல்லுவதற்கே வரம் பெற்று பிறந்தவள் என்பதாலும் ; அவள் தன்நெதிரே வந்தால் ஆயுதத்தை துறந்து விடுவேன் என பீஷ்மர் ஏற்கனவே அறிவித்து விட்டார்

ஆகவே எக்காரணம் கொண்டும் சிகண்டி பீஷ்மர் முன்பு வந்துவிடாதபடி காப்பது தனது தரப்பு வீரகளின் கடமை என எச்சரிக்கை செய்கிறான்

கீதை 1 : 11 யுத்தகளத்தில் அவரவர் போர் முனையில் யுத்தம் செய்தாலும் ; பாட்டனார் பீஷ்மரை நீங்கள் அனைவரும் சுற்றியிருந்து காப்பாற்றுங்கள் .

கீதை 1 : 12 அப்போது குரு வம்சத்தில் முதியவரும் ; மிகுந்த பிர்ஸ்தாபம் உடையவருமான பீஷ்மர் சிங்க கர்ஜ்ஜனை போன்று சங்கநாதம் எழுப்பியதால் மகிழ்ந்தான் .

கீதை 1 : 13 உடனே பற்பலரால் சங்குகளும் பேரிகைகளும் தாரை தப்பட்டம் கொம்புகளும் ஒருங்கே முழங்கின . அந்த ஒலி பயங்கரமாக இருந்தது .

கீதை 1 : 14 இதன் பிறகு வெள்ளை குதிரைகள் பூட்டப்பட்டிருந்த மகிமையான தேரில் அமர்ந்திருந்த மாதவனும் பின்பு அர்ச்சுணனும் திவ்யமான தங்கள் சங்குகளை முழங்கினார்கள்

மகிமையான தேர் என்று ஏன் சுட்டப்பட்டது என்றால் யுக மாறுதலுக்காக பல்லாயிரம் பேர்களை அழிக்கக்கூடிய அதிகாரம் பெற்ற அந்த தேரில் கொடியில் ஸ்ரீஅனுமானே அமர்ந்திருந்தார் என்ற உண்மை சஞ்சயனுக்கும் தெரிந்ததால் கூறப்பட்டது

கீதை 1 : 15 ஸ்ரீகிறிஷ்ணர் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினார் . பின்பு அர்ச்சுனன் தேவதத்தம் ஊதினார் . அவ்வாறே பீமன் பெளண்டீரம் ஊதினான்

கீதை 1 : 16 அவ்வாறே யுதிஷ்ட்ரர் அநந்தவியத்தையும் ,நகுலன் சுகோஷா வையும் சகாதேவன் மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கினார்கள்

இங்கு இறைநெறி உணர்ந்த மாந்தர்கள் செய்கை வெளியாக்கப்ப்டுகிறது . முதலில் குரு எடுத்துக்கொடுத்த பிறகே பின்பற்றி செல்லவேண்டும் என்ற நியதி கடைபிடிக்கப்பட்டது . அதுவே நாம் யாரை முன்னிறுத்துகிறோம் என்ற மகப்பெரிய ஆயுதமாகும் .

துரியோதணன் மானுஷிகமாக பீமனை பெரிய ஆளாக கணக்கு போட்டால் ; பாண்டவர்கள் ஆயுதம் ஏந்தாத ஸ்ரீகிறிஷ்னரை இங்கு முன்னிலைப்படுத்தி ; தாங்கள் அவரை சரணடைந்து இருப்பதை ; யார் யுத்தத்தை வழிநடத்தப்போகிறார் என்பதை அறிவித்துவிட்டார்கள்

கீதை 1 : 19 அந்த தெய்வீக ஒலி ஆகாயத்திலும் பூமியிலும் எதிரொலித்தது .கெளரவ அணியினரின் இதயங்களில் கலக்கத்தை உண்டாக்கியது .

ஏனெனில் யுகபுருஷன் ; நாராயணன் என்ற அதிதேவர் காப்ரியீலின் அவதாரம் . ஆகவே அவர் சங்கநாதம் முழங்கியபோது ; அந்த சத்தம் என்பது அருவ இறைவனின் முதலாவது சத்தத்திற்கு ஒப்பு ஆனது . எனவே அண்டசராசரங்களும் அதற்கு ஒப்ப அதிர்ந்தன . தேவர்களும் சங்கநாதம் செய்தார்கள் . ஆகவேதான் கெளரவ சேனை முழங்கியபோது ஆகாயத்தில் எதிரொலிக்காத முழக்கம் ; பாண்டவர் சேனை முழங்கியபோது தேவர்களாலும் பலமடைந்தது . அதனால் அசுரர்களும் கெளரவ அணியினரும் கலக்கமடைந்தனர் . இது அவர்களின் இதயங்களை பலகீனப்படுத்தியதால் அவர்கள் தோல்வி உறுதி செய்யப்பட்டது .

கீதை 1 : 20 - 22 இதன்பின்னர் அனுமக்கொடியை தேரிலே உடைய அர்ச்சுணன் ; அணிவகுத்து போர் புரிய தயாராக இருந்த கெளரவ அணியினரை பார்க்க விரும்பி ‘அச்சுதா ! ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவாக நிறுத்துங்களேன் ; இந்த யுத்தத்தில் எவரொருவருடன் நான் போரிட நெருமோ ; அதற்காக அணிவகுத்து நிற்கும் யாவரையும் நான் பார்க்கும்படியாக ரதத்தை நடுவே நிறுத்துங்களேன் ‘ என்று வில்லை நிமிர்த்திக்கொண்டு கூறினான்

இங்கு ஒரு சிறந்த போர் வீரனின் லட்சணம் சுட்டப்படுகிறது . எதிரிகளை சரியாக கணிக்கிறவனே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் . தனது வீரத்தை பலத்தை நம்பி மட்டுமே முரட்டுத்தனமாக யுத்தம் செய்வது விவேகமல்ல . எதிராளிகளை கவனிக்க வேண்டும் . அவர்களின் சாதக பாதக அம்சங்களை நிதானிக்க வேண்டும்

ஆகவே அவர்களுக்கு எதிரே பிரயாணிக்காமல் ரதத்தை இடையாக பக்கவாட்டில் நடத்தும்படியாக வேண்டினார் அர்ச்சுனன்

அப்படி இடையாக பயணிக்கும் போது ஏதேனும் பேச்சுவார்த்தைகள் முன்மொழியப்படலாம் என்பதால் யுத்தம் தொடங்க மாட்டார்கள் .

மேலும் யுகபுருஷன் அங்கிருந்ததால் யோகமாயையால் கட்டப்பட்டு இரு தரப்பாரும் செயலற்றவராக ஸ்தம்பித்தனர்

1 comment:

kirubarp said...


"கீதா உபதேசத்திற்கான காரணிகள்"