Wednesday, July 18, 2012

யோகம் 5 : கர்ம சந்நியாச யோகம் !!

(இங்கு க்ளிக் செய்து சுலோகங்களை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)


கீதை 5:1 அர்ச்சுணன் கூறினான் : கிருஷ்ணா ! முதலில் செயல் விளைவில் பற்றற்று இரு  என்றும் ;பின்னர் கடவுளுக்கான பக்தி தொண்டாக எச்செயலையும் செய்து வா  என்றும் உபதேசிக்கிறீர்கள் ! அன்பு கூர்ந்து எதை செய்வது நல்லது என தெளிவாக கூறவும் !!

கீதை 5:2 உன்னதமான கடவுளின் தூதர் கூறினார் : செயல் விளைவில் பற்றற்று இருப்பதும் ; கடவுளுக்காக என்று எச்செயலையும் செய்வதும் வெவ்வேறானதல்ல ! இருப்பினும்  கடவுளுக்காக என்று செயலாற்றுவதே மேலோட்டமாகவேனும் ஆத்தும விடுதலைக்கு நல்லது !!

கீதை 5:3 தனது செயல்களின் விளைவுகளின் மீது யார் விருப்பு வெறுப்பு கடந்தவரோ அவரே செயல் விளைவில் பற்றற்றவர் எனப்படுவார் ! அப்படிபட்ட நபர் இருமைகளின் பாதிப்புகளை கடறும் பயிற்சியால் எளிதாக லவ்கீக தளைகளில் இருந்து விடுபட்டு ஆத்தும விடுதலையில் முழுமையடைவார் !!

கீதை 5:4 கடவுளுக்கு பக்தி தொண்டையும் சாங்கிய யோகத்தையும் வெவ்வேறானது என ஆழ்ந்த அனுபவமற்றவர்கள் நினைக்கிறார்கள் ! உண்மையில் அனுபவம் பெற்றவர்கள் இவை இரண்டில் ஒன்றிலாகிலும் முன்னேறியவுடன் அது மற்றதின் நிறைவிலும் வந்து முடிந்து இரண்டும் ஒன்றாகியதை உணர்வார்கள் !

கீதை 5:5 சாங்கிய யோகத்தில் ஆழ்ந்து நிறைவடைந்தவர் அதே நிலையை பக்தியோகத்தில் நிறைவடைந்தவறும் அடைந்திருப்பதை உணர்ந்து ஒருவர் அனுபவத்தை ஒருவர் அனுபவமாக சுவீகரித்து கொள்ளுவார்கள் ! இரண்டும் கலந்த  முதிர்ந்த யோகத்தில் நிலைப்பர் !!

கீதை 5:6 சாங்கிய யோக தத்துவ விசாரம் மட்டும் செய்கிறவர் முன்னேறிய நிலைமையிலும் பரிபூரணம் எய்தாமல் தவிப்பர் ! அந்நிலையில் உன்னதமான கடவுளின் மீது பக்தி கொண்டதும் பரிபூரண நிலையை உடனே எய்துவர் !!

கீதை 5:7 தனக்குள்ளாக மூழ்கி மனதையும் புலன்களையும் அடக்கி ஆத்தும தூய்மை எய்தியவர் ;கடவுளை ஏற்று பக்தி தொண்டாக கர்மயோகத்தை செய்யும் போது எல்லாம் அவருக்கு பிரியமாகவும் எல்லோருக்கும் அவர் பிரியமானவராகவும் ஆகும் ! எவ்வகை செயல்களாலும் அவர் பாதிக்க படுவதில்லை !!

கீதை 5:8 அத்தகு மெய்ஞானமய கோஷத்தில் நிலைத்தவர் உலகியலில் பார்த்தல் , கேட்டல் , தொடுதல் , நுகர்தல் , உண்ணல் , நகர்தல் , தூங்குதல் சுவாசித்தல் என செய்தாலும் உள்ளார்ந்து எதுவுமே செய்யாதவரைப்போலவே உணர்வர் !

கீதை 5:9 ஏனென்றால் அவரைப்பொறுத்து மேற்கண்ட இயக்கங்கள் அனைத்தும் உடலும் புலன்களும் அவற்றை ஈர்க்கும் பொருட்களுடன் இடைபடுவதால் தோண்றிமறைபவையே தவிர தானும் ஆத்துமாவும் அவைகளுக்கு அப்பாற்பட்டே இருப்பார் !!

கீதை 5:10 தண்ணீரில் தாமரை இலை இருப்பதுபோல ; செயல் விளைவில் பற்றற்று செயலின் விளைவுகள் அனைத்தையும் யார் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறார்களோ அவர்களின் மீது பாவங்கள் சுமறுவதில்லை !!

கீதை 5:11 யோகிகள் எனப்படுவோர் எல்லா பற்றுக்களையும் களைந்து ; உடலாலும் , மனதாலும் , அறிவாலும் , புலன்களாலும் கடவுளுக்கென்றே செயல்பட்டு ஆத்தும தூய்மை எய்துகிறார்கள் !!


கீதை 5:12 பக்தியில் நிலைத்த ஆத்துமா கலப்பில்லாத சாந்தியை எய்தும் ; ஏனெனில் தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அவன் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறான் ! கடவுளுடன் ஒத்திசைவை கற்றுக்கொள்ளாதவனோ தனது சுயமுயற்சியின் பலன்களின் மீது ஆசை கொண்டு தடுமாற்றம் அடைகிறான் !!

கீதை 5:13 உள்ளார்ந்த ஆத்துமா தன்னை உணர்ந்து தெளிந்து ;உடலை ஆழுமை செய்து ; தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அர்ப்பணித்து விடுமானால் ஒன்பது வாயில்கள் கொண்ட உடலில் பரிபூரணம் எய்தி சுகித்திருக்கும் ! ஆத்துமா கர்மம்  செய்வதுமில்லை : கர்மத்தின் விளைவை அனுபவிப்பதுமில்லை !! மனதளவில் அவன் கர்மத்தை துறந்தவனாகிறான் !!

கீதை 5:14 உள்ளார்ந்த கடவுளின்ஆவியாகிய உயிரே ; உடலுக்கும் ஆத்துமாவுக்கும் இயக்கு சக்தியாகும் ! அது எக்செயல்களையும் உருவாக்குவதுமில்லை ; செயல்களின் பலன்களை பெற்றுக்கொள்வதுமில்லை ! அல்லது மனிதர்களை செயல்படும் படி தூண்டி விடுவதுமில்லை ; உடலின் மூவகை இயல்புகளிலிருந்தே கர்மத்தளைகள் உற்பத்தியாகி ஆத்துமாவை பிணைக்கிறது !!

கீதை 5:15 உண்ணதமான கடவுள் பூமியில் ஒருவர் பாவத்தையோ ; நெருக்கடிகளையோ செய்யும் படி ஒருபோதும் பணித்ததில்லை ! உடலில் உறையும் உயிரும் , ஆத்துமாவும் உடலால் எழும் மயக்கத்தால் தனது மெய்யுணர்வை மறந்து தடுமாற்றம் அடைகின்றன !!

கீதை 5:16 இருப்பினும் ஆத்துமா விளிப்படைந்து ஞானத்தால் அஞ்ஞானத்தை அழிக்குமானால் ; ஒருவன் எல்லாவற்றிலும் தெளிவடைவான் ! சூரியன் எல்லாவற்றையும் வெளிச்சமாக்குவது போல ஞானம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் !!

கீதை 5:17 எப்போது ஒருவனின் புத்தி . மனம் , பக்தி , அடைக்கலம் உண்ணதமான கடவுளின் மீது நிலைக்கிறதோ அப்பொழுதே அவன் பரிசுத்தம் அடைவதிலும் ; ஞானத்தை அடைவதிலும் ; தவறுகளிலிருந்து விடுபடவும் தொடங்கி ஆத்தும விடுதலைக்கான பாதையில் சரியாக முன்னேறுவான் !!

கீதை 5:18 மனத்தாழ்மை -- அடக்கம் நிறைந்த சாதுக்கள் தங்களது ஞானத்தால் ; கல்விமான்கள் , ரிஷிகள் , பசு . யானை , நாய் ஏன் நாயை உண்போரைக்கூட சமநோக்காகவே காண்பர் ! வெளிநோக்கு சம நோக்காகவே இருக்கும் !!

கீதை 5:19 ஏக இறைவனுடன் ஒருமைப்பாட்டிலும் ; இருமைகளை கடந்த மனநிலையிலும் நிலைத்தவர்கள் எவரோ ;  அவர்கள் ஏற்கனவே பிறப்பு இறப்பை தளையை வெண்று நித்தியஜீவனை அடைந்தவர்களே ! அவர்கள் உண்ணதமானவரில் நிலைத்திருப்பதால் அவரைப்போலவே மாசுமருவற்றவராகவே ஆவர் !!

கீதை 5:20 மனம் விரும்பும் ஒன்றை சாதித்ததால் மகிழ்சியடையாதவர் எவரோ ; மனம் விரும்பாத ஒன்றை அடைந்ததால் துக்கிக்காதவர் எவரோ ; முற்றறிவில் நிலைத்து தடுமாற்றம் இன்றி கடவுளை அறிகிற அறிவில் வளர்கிறவர்கள் எவர்களோ அவர்களே  ஞானத்தில் நிலைத்தவராவர் !!

கீதை 5:21 ஆத்தும விடுதலை அடைந்த நபர் லவ்கீக புலன் கவர்ச்சியின் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொள்ளமாட்டார் ; ஏனென்றால் தனக்குள் மூழ்கி ஆத்தும பரிபூரணத்தின் பேரின்பத்தில் திளைத்தவராகவே இருப்பார் ! அவர் உண்ணதமானவரில் நிலைப்பதால் தன்னுணர்வு பெற்று வற்றாத பேரின்பத்திற்கு ஏதுவாவார் !!

கீதை 5:22 ஞானவான் ஒருபோதும் துன்பத்திற்கு காரணமானவைகளில் பங்கு பற்றவே மாட்டார் ! அவைகள் புலன்கள் உலகோடு கொள்ளும் தொடர்புகளாலேயே உருவாகின்றன ! குந்தியின் மகனே ! அவ்வகை சிற்றின்பங்கள் துவங்குவது போன்றே விரைவில் முடியக்கூடியவை !நிலையற்றவைகளை ஞானவான் கொண்டாடுவதில்லை !!

கீதை 5:23 இந்த உடலை விட்டுவிடும் முன்னர் ஒருவர் புலன்களின் தகிப்பில் சாந்தி உண்டாக்குவாரானால் ; இச்சையையும் கோபத்தையும் தடுத்து நிறுத்தும் வல்லமையுள்ளவரானால் ; அவர் உண்ணத நிலையை எட்டி ; இவ்வுலகிலும் ஆனந்ததில் திளைப்பவராவார் !!

கீதை 5:24 யார் தனக்குள்ளாகவே திளைக்கிறாரோ ; தனக்குள்ளாகவே விளித்திருந்து ஆனந்தத்தை கண்டவரோ ; அவர் தனக்குள்ளாக மூழ்கி ஆத்தும பரிபூரணத்தை எட்டி உண்ணதமானவருடன்  ஆத்துமதொடர்பு பெறுவார் ! அப்படியே முடிவில் பரமாத்துமாவுடன் ஐக்கியமடைவார் !!

கீதை 5:25 அஞ்ஞானத்திலிருந்து விளையும் இருமைகளை கடந்தவர் எவரோ ; தனக்குள்ளாக நிலைத்து ஆத்தும விளிப்படைந்தவர் எவரோ ; உலகில் நன்மைகளின் பக்கம் இடைவிடாமல் பங்களித்துக்கொண்டிருப்பவர் எவரோ ; அவரே உலகியலின் பாவத்தளைகள் அனைத்தையும் அறுத்து ; உண்ணதமானவருக்குள் ஆத்தும விடுதலை எய்துவார் !!

கீதை 5:26 கோபத்திலிருந்தும் இச்சைகளிலிருந்தும் விடுபடுபவர் எவரோ ; தன்னை உணர்கிறவர் எவரோ ; தன்னை தானே ஒழுங்குபடுத்துபவர் எவரோ ; பரிபூரணத்தை எட்ட இடைவிடாமல் உழைப்பவர் எவரோ ; அவரே கூடிய விரைவில் கடவுளில் ஆத்தும விடுதலை பெற வாக்களிக்க பட்டவராவார் !!

கீதை 5:27 எல்லா புலன் வழி நுகர்வையும் அடைத்து ; புருவ மத்தியில் கண்களையும் உணர்வையும் நிலைநிருத்தி ;உள்மூச்சும் வெளிமூச்சும் ஒடுங்கிய நிலையை எய்தி ; மனதையும் , புத்தியையும் ,புலன்களையும் அடக்கி ; ஆத்துமவிடுதலைக்காக யோகசாதனை செய்து வருக !!

கீதை 5:28 இவ்வாறாக மனதையும் , பத்தியையும் ,புலன்களையும் அடக்கி ; ஆத்துமவிடுதலைக்காக யோகசாதனை செய்கிறவர்கள் இச்சை , பயம் , கோபத்தை கடற பெறுவர் ! அவ்வாறு கடந்த நிலையடைந்தால் ஆத்தும விடுதலை அடைவது திண்ணம் !!

கீதை 5:29 அகில உலகங்கள் ,தேவதூதர்கள் அனைத்திற்கும் அதிபதியானவரும் ; இம் மண்ணுலகில் அனைத்து உயிரிணங்களையும் காக்கிறவரும் உணவளிப்பவரும் ; எல்லா யாகங்களும் யோகங்களும் யாரின் தயவை நாடி செய்யப்பட வேண்டுமோ ; அந்த  உண்ணதமான கடவுளை அறிகிற அறிவிலே வளர்கிறவர்கள் உலகியலின் துன்பங்கள் அனைத்தையும் கடந்து சாந்தியிலும் சமாதானத்திலும் நிலைப்பர் !!